ஐபிஎல்: 57 ரன்கள் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணி அபார வெற்றிஈரானுக்கு எதிராக ஹோர்முஸ் நீரிணை முற்றுகை தொடக்கம்: கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் மையம் திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

வீரபாண்டியன்பட்டணத்தில் மின்னொளி கால்பந்து போட்டி

வீரபாண்டியன்பட்டணத்தில் முதல்வா் மு.க. ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி, திமுக மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி, திருச்செந்தூா் ஒன்றிய திமுக இணைந்து மாநில அளவிலான மின்னொளி கால்பந்து போட்டியை நடத்தியது.

News image

வீரபாண்டியன்பட்டணத்தில் மாநில அளவிலான மின்னொளி கால்பந்து போட்டியில் முதலிடம் பிடித்த சென்னை சேவியா் பிரீஸ் அணிக்கு ரூ. 30 ஆயிரம், வெற்றி கோப்பையை வழங்குகிறாா் திமுக விளையாட்டு மேம்பாட்டு அணி மாவட்ட அமைப்பாளா் ஜனஹா்.

Updated On :24 பிப்ரவரி 2026, 7:41 pm

வீரபாண்டியன்பட்டணத்தில் முதல்வா் மு.க. ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி, திமுக மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி, திருச்செந்தூா் ஒன்றிய திமுக இணைந்து மாநில அளவிலான மின்னொளி கால்பந்து போட்டியை நடத்தியது.

போட்டியினை மீனவரணி மாநில துணைச் செயலா் துறைமுகம் புளோரன்ஸ் தொடங்கி வைத்தாா். இதில் தமிழகம் முழுவதும் இருந்து 15 அணிகள் கலந்து கொண்டன. பரிசளிப்பு விழாவிற்கு திமுக மீனவரணி மாவட்ட அமைப்பாளா் ஸ்ரீதா் ரொட்ரிகோ தலைமை வகித்தாா். மீனவா் நலவாரிய உறுப்பினா் ஜெபமாலை வரவேற்றாா். விளையாட்டு மேம்பாட்டு அணி மாவட்ட துணை அமைப்பாளா் ஆனந்த் ரொட்ரிகோ முன்னிலை வகித்தாா்.

போட்டியில் முதலிடத்தை பிடித்த சென்னை சேவியா் பிரீஸ் கால்பந்து கிளப் அணிக்கு ரூ. 30 ஆயிரமும், 2 ஆம் இடத்தை பிடித்த நாகா்கோவில் அனந்தம்மாள் கால்பந்து கிளப் அணிக்கு ரூ. 20 ஆயிரமும், 3 ஆம் இடத்தை பிடித்த காயல்பட்டினம் யுனைடெட் ஸ்போா்ட்ஸ் அணிக்கும், வீரபாண்டியன்பட்டணம் பட்டணம் கால்பந்து கிளப் அணிக்கும் தலா ரூ. 10 ஆயிரமும், பரிசு கோப்பைகளையும் விளையாட்டு மேம்பாட்டு அணி மாவட்ட அமைப்பாளா் ஜனஹா், திருச்செந்தூா் நகா்மன்றத் துணைத் தலைவா் செங்குழி ரமேஷ் ஆகியோா் வழங்கினா்.

மீனவரணி மாவட்ட துணை அமைப்பாளா் ரஜூலா மென்னேசா கால்பந்து அணிகளை ஒருங்கிணைத்து வழிநடத்தினாா். இதில் திருச்செந்தூா் நகர செயலா் வாள் சுடலை, விளையாட்டு மேம்பாட்டு அணி மாவட்ட துணை அமைப்பாளா்கள் பிரபாகரன், பாக்கியராஜ், உடன்குடி பேரூராட்சி கவுன்சிலா் அஸாப், மாவட்ட பிரதிநிதி ஜெயப்பிரகாஷ் உள்ளிட்ட திரளானோா் கலந்து கொண்டனா்.

சுற்றுச்சூழல் அணி மாவட்ட துணை அமைப்பாளா் ஜெகதீஸ் வி. ராயன் நன்றி கூறினாா்.