ஓய்வூதியம் பெற வந்த முதியவருக்குக் காத்திருந்த அதிர்ச்சி! வங்கிக் கணக்கில் ரூ.759 கோடி!வானில் தோன்றும் அதிசயம்! ஜூலை 17ஆம் தேதி வரை காத்திருங்கள்!பழனி கோயிலுக்குச் சொந்தமான நிலப் பத்திரப்பதிவு செல்லாது: உயர் நீதிமன்ற மதுரை கிளைஊழியர்கள் இல்லை, ரயில்கள் நிற்காது! ரூ.6 கோடியில் உருவான அதிசய ரயில் நிலையம்! தமிழக பேரவை முன்பு சத்தியாகிரக போராட்டம்! வாட்டாள் நாகராஜ் அறிவிப்பு! திருவள்ளூர் மருத்துவக் கல்லூரிக்கும் கூடுதலாக 50 மருத்துவ இடங்கள் ஒதுக்கீடு!அண்ணாமலையின் ‘வீ தி லீடர்ஸ்’ திருச்செந்தூர் மாநாடு ரத்து! தவெக அமைச்சரவையில் மார்க்சிஸ்ட் கம்யூ. இடம்பெறுமா? பெ. சண்முகம் பதில்!கர்நாடகத்தில் மேக்கேதாட்டு அணைக்கு ஆதரவாக போராட்டம்! தமிழக பேருந்துகள் நிறுத்தப்பட்டதால் பதற்றம்! எ.வ. வேலுவுக்கு எதிரான தமிழக அரசின் மேல்முறையீடு தள்ளுபடி! - உச்ச நீதிமன்றம் முதல்வர் விஜய்யுடன் மார்க்சிஸ்ட் கம்யூ. மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் சந்திப்பு! நெருக்கடி நிலையில் கலைஞருக்கு ஆதரவாக நின்றவர்! காமராஜருக்கு ஸ்டாலின் புகழாரம்! கல்வித்துறையை முழுக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர மோடி அரசு துடிக்கிறது! மாணிக்கம் தாகூர்
/

தள்ளிப்போகிறதா தவெக மாநாடு? அனுமதி கிடைப்பதில் சிக்கல்?

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு பற்றி...

News image

தமிழக வெற்றிக் கழக (தவெக) கொடி - Din

Updated On :2 செப்டம்பர் 2024, 11:06 am IST

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு தள்ளிப் போக வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அருகே தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டை வருகின்ற 23ஆம் தேதி நடத்துவதற்கு மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளரிடம் அனுமதி கோரி கட்சித் தரப்பில் மனு அளிக்கப்பட்டிருந்தது.

ஆனால், விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தீபக் சிவாச் விடுமுறையில் இருப்பதால் மாநாட்டுக்கு இதுவரை காவல்துறை தரப்பில் அனுமதி வழங்கப்படவில்லை.

இதனிடையே, தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்திடம், மாநாடு குறித்து 21 கேள்விகள் எழுப்பிய காவல்துறை பதிலளிக்க நோட்டீஸ் வழங்கியுள்ளது.

மாநாட்டில் கலந்து கொள்ளும் பிரபலங்களின் விவரம், மாநாட்டு மேடையில் அளவு, அத்தியாவசிய வசதிகள், வாகன நிறுத்துடம், பாதுகாப்பு ஏற்பாடுகள் உள்ளிட்ட கேள்விகள் எழுப்பப்பட்டுள்ளது.

இதனிடையே, விடுமுறை முடிந்து விழுப்புரம் காவல் கண்காணிப்பாளர் இன்று பணிக்கு திரும்பும் நிலையில், மாநாடுக்கு அனுமதி வழங்கப்படுவது குறித்து பரிசீலனை செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில், தவெக மாநாடு தள்ளிப் போனால் வேறெந்த தேதியில் நடத்துவது என்பது குறித்து கட்சித் தலைவர் விஜய்யின் ஜோதிடரை சந்தித்து புஸ்ஸி ஆனந்த் பேசியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

காவல்துறை தரப்பில் இருந்து அனுமதி கிடைக்க தாமதம் ஏற்பட்டால், கட்சியின் மாநாட்டை அடுத்தாண்டு ஜனவரியில் நடத்த விஜய் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

அடுத்த 3 மாதங்கள் மழைக் காலம் என்பதால், மாநாடு நடந்தினால் சரியாக இருக்காது என்று விஜய் மறுப்பு தெரிவித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும் நடிகருமான விஜய், பனையூரில் உள்ள கட்சித் தலைமை அலுவலகத்தில் கடந்த சில நாள்களுக்கு முன்னதாக கட்சியின் கொடியை அறிமுகம் செய்துவைத்தார்.

கொடி சிவப்பு, மஞ்சள் என இரு வண்ணங்கள் மத்தியில் 2 போர் யானைகள் வாகை மலருடன் வடிவமைக்கப்பட்டுள்ள கொடியும், கொடிப் பாடலும் விஜய்யின் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.

இதனைத் தொடர்ந்து, மாபெரும் மாநில மாநாட்டை நடத்தி கட்சியின் கொடி மற்றும் பாடல் குறித்தும், கட்சியின் கொள்கை குறித்தும் நடிகர் விஜய் விளக்கம் அளிக்க திட்டமிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.