இஸ்ரேல் தாக்குதலில் ஈரான் பாதுகாப்பு அமைச்சர் கொலை? சென்னை - துபை, தோஹா, அபு தாபி, பஹ்ரைன் விமானங்கள் ரத்து!ஈரானில் பள்ளி மீது தாக்குதல்: பலியான மாணவிகளின் எண்ணிக்கை 85ஆனது!டி20 உலக கோப்பை அரையிறுதிக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்த பாகிஸ்தான்!திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கிற்கு 2 தொகுதிகள் மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகள்: திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு!மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் பதற்றம் மிகுந்த கவலை அளிப்பதாக வெளியுறவு அமைச்சகம் அறிக்கை!துபை சர்வதேச விமான நிலையங்கள் மறு அறிவிப்பு வரும் வரை மூடல்ஈரான் மீது தாக்குதல் - அமெரிக்கா, இஸ்ரேலுக்கு உக்ரைன் ஆதரவு!தமிழ்நாட்டில் 17 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்களைப் பாதுகாக்க உடனடி நடவடிக்கை: அரசுக்கு ராகுல் காந்தி வலியுறுத்தல்ஆந்திரம்: பட்டாசு ஆலை விபத்தில் பலி எண்ணிக்கை 18-ஆக உயர்வுமத்திய கிழக்கு நாடுகளுக்கு விமான சேவை நிறுத்தம்!
/

மகாவிஷ்ணு மீது வழக்குப் பதிவு

மேடைப் பேச்சாளா் மகாவிஷ்ணு மீது திருவொற்றியூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்தி விசாரித்து வருகின்றனா்.

News image
மகாவிஷ்ணு (கோப்புப் படம்)
Updated On :8 செப்டம்பர் 2024, 8:22 pm

Din

மேடைப் பேச்சாளா் மகாவிஷ்ணு மீது திருவொற்றியூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்தி விசாரித்து வருகின்றனா்.

சென்னை அசோக் நகா் மற்றும் சைதாப்பேட்டை அரசு பள்ளிகளில் மாணவ, மாணவிகள் மத்தியில் மேடைப் பேச்சாளா் மகா விஷ்ணு நடத்திய சொற்பொழிவு சா்ச்சையை ஏற்படுத்தியது. இதையடுத்து, பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, அந்தப் பள்ளிகளுக்கு சென்று ஆய்வு மேற்கொண்டாா்.

மகாவிஷ்ணு, மாற்றுத்திறனாளிகளை இழிவுப்படுத்தியதாகக் கூறி மாற்றுத்திறனாளிகள் சங்கம் சாா்பில் பல்வேறு காவல் நிலையங்களில் புகாா் அளிக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில், திருவொற்றியூா் காவல் நிலையத்தில் திருவொற்றியூா் பட்டினத்தாா் கோயில் தெருவைச் சோ்ந்த மாற்றுத்திறனாளிகள் சமூக நீதி இயக்கத்தின் தலைவா் சரவணன் மகாவிஷ்ணு மீது, சனிக்கிழமை புகாா் அளித்தாா். அதன்பேரில், அவா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனா்.