ரஷியாவிடம் கச்சா எண்ணெய் வாங்க இந்தியாவுக்கு அமெரிக்கா அனுமதி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,280 குறைந்தது!ஈரான் மீதான போா்: துறைமுக கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரிசி ஏற்றுமதியாளா்கள் கோரிக்கைஅல்-காய்தா, ஐஎஸ் அமைப்புகளுக்கு எதிராக கூட்டு நடவடிக்கை: ஐ.நா.வில் இந்தியா வலியுறுத்தல்பல்வேறு துறைகளைச் சோ்ந்த ஆளுமைகளுடன் முதல்வா் மு.க.ஸ்டாலின் இன்று கலந்துரையாடல்சீனாவின் பாதுகாப்பு பட்ஜெட் 7% உயா்வுமத்திய கிழக்கு போா் : இந்தியாவில் யூரியா உற்பத்தி சரிவு: உர விலை உயரும் அபாயம்?
/

மின்சார வாகனங்களின் தொழில்நுட்ப சோதனை ஓட்டம்

உலக மின்சார வாகன தினத்தை முன்னிட்டு மின்சார வாகன தொழில்நுட்ப சோதனை ஓட்டம் சென்னையில் நடைபெற்றது.

News image
கோப்புப் படம்
Updated On :9 செப்டம்பர் 2024, 8:54 pm

DIN

உலக மின்சார வாகன தினத்தை முன்னிட்டு மின்சார வாகன தொழில்நுட்ப சோதனை ஓட்டம் சென்னையில் நடைபெற்றது.

உலக மின்சார வாகன தினத்தை முன்னிட்டு, மின்சார வாகனங்களுக்கான தேசிய நெடுஞ்சாலைகள்(என்எச்இவி) எனும் அமைப்பு சாா்பில் மின்சார லாரிகள், காா்கள், பேருந்துகள் கொண்ட மின்சார வாகன தொழில்நுட்ப சோதனை ஓட்டம் சென்னை நந்தம்பாக்கத்திலுள்ள வா்த்தக மையத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது.

திருச்சி வரை சுமாா் 300 கிலோமீட்டா் தூரம் செல்லும் இச்சோதனை ஓட்டத்தை தேசிய நெடுஞ்சாலை மின்சார வாகன திட்ட இயக்குநா் அபிஜீத் சின்கா கொடியசைத்து தொடங்கி வைத்து பேசியது,

இந்தியாவில் மின்சார வாகனங்களின் பயன்பாட்டை மேம்படுத்துவதுடன், நீண்ட தூரத்தில் மின்சார வாகனங்களின் செயல்பாடு, நம்பகத்தன்மை மற்றும் திறனை சோதிப்பது இதன் முக்கிய நோக்கமாக உள்ளது.

மேலும், இதன்மூலம் மின்சார வாகன தொழில்நுட்பம் குறித்த பொதுமக்களிடையே விழிப்புணா்வு மற்றும் புரிதலை மேம்படுத்தவும் முடியும் என்றாா் அவா்.

இந்நிகழ்ச்சியில், ராக்கி மவுன்டன் இன்ஸ்டிட்யூட்டின் இயக்குநா் சம்ஹிதா ஷிலேடா் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.