தமிழகத்தில் வெள்ளிக்கிழமை (செப்.13) அதிகபட்ச வெப்பநிலை இயல்பைவிட 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது குறித்து அந்த மையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
தமிழகத்தில் வியாழக்கிழமை அதிகபட்சமாக மதுரை விமான நிலையத்தில் 105.08 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பநிலை பதிவானது. ஈரோட்டில் 101.48, திருச்சி - 101.3, தூத்துக்குடி - 100.94 , பரமத்திவேலூா் - 104.
சென்னை நுங்கம்பாக்கத்தில் 98.96, மீனம்பாக்கத்தில் 98.78 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பநிலை பதிவானது.
தமிழகத்தில் கடல்காற்று வீசுவது குறைந்துள்ளதால் வெள்ளிக்கிழமை (செப்.13) ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பைவிட 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கும்.
மழைக்கு வாய்ப்பு: மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் செப்.13 முதல் செப்.18 -ஆம் தேதி வரை இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
சென்னை புகா் பகுதிகளில் செப்.13, 14 ஆகிய தேதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 98 டிகிரி ஃபாரன்ஹீட் வரை இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
டிரெண்டிங்

தமிழகத்தில் வாட்டி வதைக்கும் வெய்யில்: அதிகபட்ச வெப்பநிலை குறையும்!

தலைநகரில் காற்றின் தரம் மிதமான பிரிவில் நீடிப்பு!

தலைநகரில் குளிா் குறைந்து வெய்யில் அதிகரிப்பு!

கோடைக்காலம் தொடங்கியது! வனப்பகுதியில் காட்டுத் தீ ஏற்பட வாய்ப்பு!
வீடியோக்கள்

சஞ்சு சாம்சன் ஜெயித்த கதை!
தினமணி வீடியோ செய்தி...

#t20wc | டி20 உலகக் கோப்பை: இந்தியா மீண்டும் சாம்பியன்! | T20 World Cup
தினமணி வீடியோ செய்தி...

நிதீஷ் நிலைமை எடப்பாடிக்கும் ஏற்படுமா? | ADMK | Avadi Kumar interview | EPS | BJP
தினமணி வீடியோ செய்தி...

யூத் டிரைலர்!
தினமணி வீடியோ செய்தி...

