காமன்வெல்த் பளுதூக்குதலில் வெண்கலம் வென்றார் பிந்தியாராணி தேவி!நாமக்கல் கவிஞர் மாளிகைக்கு மாறுகிறது முதல்வர் அலுவலகம்! அதிகாரப்பூர்வ அறிவிப்பு!சிவகாசியில் சட்டவிரோத பட்டாசு ஆலைகள் செயல்படுகின்றனவா? ஆய்வு செய்ய முதல்வர் உத்தரவுசென்னை தலைமைச் செயலகம் முன்பு விவசாயிகள் போராட்டம்கரூர் அரசுப் பணி ஆணை ரத்து: உச்சநீதிமன்றம் செல்ல தவெக திட்டம்!போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் கைது; விடுவிக்கவில்லை என்றால் மீண்டும் போராட்டம் - சிஜேபிசென்னை கோயம்பேடு கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் முதல்வர் சி. ஜோசப் விஜய் ஆய்வுகரூரில் முதல்வர் விஜய் வழங்கிய அரசுப் பணி ஆணைகள் ரத்து! - உயர் நீதிமன்றம்
/

பேரறிஞர் அண்ணா பிறந்த நாளில் கவனத்தை ஈர்த்துள்ள விஜய்யின் பதிவு!

பேரறிஞர் அண்ணா பிறந்த நாள்: கவனத்தை ஈர்த்துள்ள விஜய்யின் பதிவு!

News image

பெரியாருடன் அண்ணா

Updated On :15 செப்டம்பர் 2024, 6:44 pm IST

தமிழகத்தின் முன்னாள் முதல்வர் அண்ணாதுரை பிறந்த நாள் இன்று(செப். 15) கொண்டாடப்படுகிறது. பேரறிஞர் அண்ணாவின் 116-வது பிறந்த நாளையொட்டி அரசியல் தலைவர்கள் பலரும் அண்ணாவை நினைவுகூர்ந்து வாழ்த்தியுள்ளனர்.

அந்த வரிசையில், தமிழக வெற்றிக் கழகம்(தவெக) கட்சித் தலைவரும் நடிகருமான விஜய் இன்று பிற்பகல் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவு சமூக வலைதளங்களில் கவனத்தை ஈர்த்துள்ளது.

விஜய் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதில், நம் மாநிலத்துக்கு தமிழ்நாடு என்ற பெயர் வர அண்ணா எடுத்த நடவடிக்கைகள், சுயமரியாதைத் திருமணங்களுக்கு சட்ட அங்கீகாரம் வழங்கியது, தமிழகத்தில் இருமொழிக் கொள்கையை அமல்படுத்தியது ஆகியவற்றை நினைவுகூர்ந்து குறிப்பிட்டு அண்ணாவை போற்றியுள்ளார்.

அதுமட்டுமல்லாமல் அரசியல் வரலாற்றில் வரலாறு படைத்தவர் ‘அண்ணா’ எனப் புகழாரம் சூட்டியுள்ளார் விஜய்.

ஓணம் பண்டிகை இன்று கொண்டாடப்படும் நிலையில், மலையாள சொந்தங்கள் அனைவருக்கும் விஜய் தன் இதயங்கனிந்த ஓணம் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.