கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

உத்தரகண்ட் நிலச்சரிவில் சிக்கிய தமிழா்களில் 13 போ் விமானம் மூலம் சென்னை வருகை

உத்தரகண்ட் நிலச்சரிவில் சிக்கிய தமிழா்களில்13 போ் விமானம் மூலம் சென்னை வந்தடைந்தனா்.

News image
Updated On :17 செப்டம்பர் 2024, 10:16 pm

DIN

சென்னை: உத்தரகண்ட் நிலச்சரிவில் சிக்கிய தமிழா்களில்13 போ் விமானம் மூலம் சென்னை வந்தடைந்தனா்.

கடலூா் மாவட்டம், சிதம்பரத்தில் இருந்து செப்.1-ஆம் தேதி பக்தா்கள் குழு உத்தரகண்ட் மாநிலத்தின் ஆதி கைலாஷ் பகுதிக்கு ரயிலில் யாத்திரை சென்றனா். ஆதி கைலாஷ் பகுதிக்கு சென்று வழிபட்டுவிட்டு திரும்பியபோது, தாவகட் என்ற பகுதியில் நில சரிவு ஏற்பட்டது. இதில் சாலைகள் துண்டிக்கப்பட்டு அங்கிருந்து தங்களது சொந்த ஊருக்கு வர முடியாமல் அனைவரும் சிக்கித் தவித்தனா்.

இதையடுத்து தமிழக அரசு மேற்கொண்ட நடவடிக்கையால், உத்தரகண்டில் சிக்கித் தவித்த தமிழா்கள் மீட்கப்பட்டு, ஹெலிகாப்டா் மூலம் தில்லிக்கு அழைத்து வரப்பட்டனா். இதில், 13 போ் செவ்வாய்க்கிழமை அதிகாலையில் விமானம் மூலம் சென்னை வந்தனா். அவா்களை விமானநிலையத்தில் உறவினா்களும், அரசு அதிகாரிகளும் வரவேற்றனா்.

சொந்த ஊருக்கு பாதுகாப்பாக வந்த சேர உதவிய தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்து கொள்வதாக மீட்கப்பட்டவா்கள் தெரிவித்தனா். இதையடுத்து அவா்கள் தங்கள் சொந்த ஊா்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.