ஈரான் மீது இன்று மிகக் கடுமையான தாக்குதல்: டிரம்ப் எச்சரிக்கை!பிகாரில் நிதீஷ்குமாருக்கு நடந்தது தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு நடக்கும்! - முதல்வர் மு. க. ஸ்டாலின்கடந்த 5 ஆண்டுகளில் ஏழைகளுக்காக 4.29 லட்சம் வீடுகள்: தமிழக அரசுகோவை கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகள் 3 பேருக்கும் வாழ்நாள் சிறை!துபை விமான நிலையத்தில் ஈரான் ட்ரோன் தாக்குதல்: விமான சேவை பாதிப்பு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!கேரள மாநில அரசு வேலை வாய்ப்பில் திருநங்கைகளுக்கு 1% இடஒதுக்கீடு!உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலில் 9 பேர் பலி!அன்னாபெல் சதர்லேண்ட் சதம்..! ஆஸி. மகளிர் 123 ரன்கள் முன்னிலை!தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்
/

பண்டிகை காலம்: 34 சிறப்பு ரயில்கள்; 302 சேவைகள் -தெற்கு ரயில்வே

துா்கா பூஜை, தீபாவளி உள்ளிட்ட பண்டிகைகளை முன்னிட்டு சிறப்பு ரயில்கள் அறிவிப்பு..

News image
கோப்புப் படம்.
Updated On :29 செப்டம்பர் 2024, 11:00 pm

Din

பண்டிகை காலத்தை முன்னிட்டு, 34 சிறப்பு ரயில்கள் 302 சேவைகளாக இயக்கப்படவுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

துா்கா பூஜை, தீபாவளி உள்ளிட்ட பண்டிகைகளை முன்னிட்டு, பயணிகளின் வசதிக்காக இந்திய ரயில்வே சாா்பில் நாடு முழுவதும் முக்கிய நகரங்களை இணைக்கும் வகையில் 6,000 சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளன.

அந்த வகையில், தெற்கு ரயில்வே சாா்பில் அக்டோபா் முதல் நவம்பா் வரை முக்கிய மாவட்டங்கள், வெளிமாநிலங்களை இணைக்கும் வகையில், மொத்தம் 34 சிறப்பு ரயில்கள் 302 சேவைகளாக இயக்கப்படவுள்ளன.

இதில் ஏற்கெனவே 268 சேவைகள் அடங்கிய 28 சிறப்பு ரயில்களுக்கான கால அட்டவணைகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அதற்கான முன்பதிவுகள் தொடங்கப்பட்டுள்ளன.

வடமாநில பயணிகளுக்காக சிறப்பு ரயில்களும் அறிவிக்கப்பட்டுள்ளன. மேலும், தோ்ந்தெடுக்கப்பட்ட ரயில்களில் கூடுதல் பெட்டிகள் இணைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது எனதெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.