அண்ணா நினைவுநாளையொட்டி மெரினாவிலுள்ள நினைவிடத்தில் திமுகவினர் மலர் தூவி இன்று (பிப். 3) மரியாதை செலுத்தினர்.
முன்னதாக திருவல்லிக்கேணி - வாலாஜா சாலையில் உள்ள அரசு விருந்தினர் மாளிகையிலிருந்து அண்ணா நினைவிடம் வரை திமுகவினர் அமைதிப்பேரணியில் ஈடுபட்டனர்.
அண்ணா நினைவுநாளையொட்டி திமுகவினர் அனைவரும் அமைதிப்பேரணி நடத்தி அறிஞர் அண்ணாவுக்கு மரியாதை செலுத்த வேண்டும் என முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவுறுத்தியிருந்தார்.
அதன்படி திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் தலைமையில் சென்னையில் திமுக அமைதிப்பேரணி நடைபெற்றது. இந்த அமைதிப்பேரணியில் திமுக பொருளாளர் டி. ஆர். பாலு, கனிமொழி எம்.பி., அமைச்சர்கள் உதயநிதி, சேகர் பாபு உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.
திருவல்லிக்கேணி - வாலாஜா சாலையில் உள்ள அரசு விருந்தினர் மாளிகையிலிருந்து அமைதிப்பேரணி புறப்பட்டு, அண்ணா நினைவிடத்தில் முடிந்தது.
அண்ணா நினைவுநாளையொட்டி அவரின் நினைவிடம் மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. நினைவிடம் வரை நடைபெற்ற அமைதிப்பேரணிக்குப் பிறகு துரைமுருகன் அண்ணா நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
அதனைத் தொடர்ந்து திமுக எம்.பி.க்கள், அமைச்சர்கள், திமுக நிர்வாகிகள் அண்ணா நினைவிடத்தில் அடுத்தடுத்து மரியாதை செலுத்தினர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தேர்தலில் லோகேஷ் கனகராஜ் வாக்களிக்காதது ஏன்? ஆர்.ஜே. பாலாஜி விளக்கம்!

கும்பகோணம் சாரங்கபாணி கோயிலில் தேரோட்டம்!
கேரளம்: பாலியல் தொழிலில் ஈடுபட்டதாக வங்கதேச பெண்கள் கைது

கோடை வெப்பத்தால் பாதிக்கப்பட்டவருக்கு எப்படி உதவ வேண்டும்?
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


