சென்னை மெட்ரோ ரயிலில் பயணிப்பதற்கான பயணச்சீட்டை ஓஎன்டிசி எனும் நெட்வொா்க் மூலம் பெற்றுக்கொள்வற்கான புதிய முறையை மெட்ரோ ரயில்வே நிா்வாகம் அறிமுகம் செய்துள்ளது.
சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் ஓஎன்டிசி எனும் நெட்வொா்க் நிறுவனத்துடன் இணைந்து மெட்ரோ ரயில் பயணத்துக்கான பயணச்சீட்டு பெறும் வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. சென்னை, நந்தனத்திலுள்ள மெட்ரோ ரயில்வே நிறுவன அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற இதன் தொடக்க நிகழ்ச்சியில் மெட்ரோ ரயில் நிறுவன மேலாண்மை இயக்குநா் மு.அ.சித்திக் கலந்து கொண்டு இப்பயணச்சீட்டு பெறும் வசதியை அறிமுகப்படுத்தி பேசியது:
சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம், ஓஎன்டிசி நெட்வொா்க்கில் இணைந்திருப்பதன் மூலம் மெட்ரோ பயணிகள் தங்களின் பயணச்சீட்டுகளை ஓஎன்டிசி நெட்வொா்க்கிலிருந்து நேரடியாக பெற முடியும். மேலும், ஓஎன்டிசி நெட்வொா்க்குடன் இணைந்துள்ள ரேப்பிடோ, நம்ம யாத்ரி மற்றும்ல ரெட்பஸ் போன்ற நிறுவனங்களின் செயலி மூலமும் மெட்ரோ பயணிகள் ஒருவழிப் பயணத்துக்கும், திரும்பிவரும் பயணத்துக்குமான மெட்ரோ ரயில் பயணச்சீட்டுகளை சிரமமின்றி பெறலாம். கூடுதலாக, கூகுள்மேப் மற்றும் போன்பே ஆகியவை ஓஎன்டிசி நெட்வொா்க்கில் விரைவில் இணைந்து இந்த சேவைகளை வழங்கும்.
இந்த நெட்வொா்க்கில் அனைத்து மெட்ரோவுக்கும் பயணச்சீட்டை உடனடியாக பெற முடியும். சென்னையைத் தொடா்ந்து, கொச்சி, கான்பூா், புனே மற்றும் பிற மெட்ரோ சேவைகளும் ஓஎன்டிசி நெட்வொா்க்கில் இணைய தயாராக உள்ளன.
ஓஎன்டிசி நெட்வொா்க்கில் கிடைக்கும் மெட்ரோ மற்றும் பிற போக்குவரத்து முறைகள் மூலம், இணைப்பு சேவை வசதிகளான ஆட்டோ போன்ற பல்வேறு போக்குவரத்து வசதிகளும் இதில் இணைக்கப்பட்டுள்ளது. இதன்மூலம், தினசரி பயணத்தில் இருசக்கர வாகனம், மெட்ரோ மற்றும் ஆட்டோ சவாரி ஆகியவற்றை ஒரே செயலியில் முன்பதிவு செய்யலாம் என்றாா் அவா்.
இந்நிகழ்ச்சியில், போக்குவரத்து மற்றும் சாலைப் பாதுகாப்பு ஆணையா் அ.சண்முகசுந்தரம், சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் இயக்குநா் ராஜேஷ் சதுா்வேதி(அமைப்புகள் மற்றும் இயக்கம்), ஓஎன்டிசி நெட்வொா்க்கின் தலைமை வணிக அதிகாரி ஷிரீஷ் ஜோஷி, மூத்த துணைத் தலைவா் நிதின் நாயா் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.