செப். இறுதி வரை நமது சுற்றுச்சூழல் விழிப்புணர்வு பணிகள் தொடர்ந்து நடைபெறும்: அண்ணாமலைஅமராவதி அணையில் இருந்து நாளைமுதல் நீர் திறப்பு: முதல்வர் விஜய் உத்தரவுஉஸ்பெகிஸ்தானில் பிரதமர் மோடி தமிழ்நாடு ஆளுநராக கிரண்குமார் ரெட்டி? முதல்வர் விஜய்யின் நண்பர்? வேளாங்கண்ணி மாதா பேராலய பெருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம் தமிழ்நாட்டில் விபத்தில் வந்ததுதான் தவெக ஆட்சி: எடப்பாடி பழனிசாமி

கிளாம்பாக்கம் - தென் மாவட்ட பேருந்துகளின் கட்டணம் குறைப்பு!

சென்னை கிளாம்பாக்கத்தில் இருந்து தென் மாவட்டங்களுக்கு இயக்கப்படும் பேருந்துகளின் கட்டணத்தை தமிழக அரசு குறைத்துள்ளது.

Published On :7 பிப்ரவரி 2024, 8:56 pm IST

சென்னை கிளாம்பாக்கத்தில் இருந்து தென் மாவட்டங்களுக்கு இயக்கப்படும் பேருந்துகளின் கட்டணத்தை தமிழக அரசு குறைத்துள்ளது.

சென்னை புறநகர்ப் பகுதியான கிளாம்பாக்கத்தில் கலைஞர் நூற்றாண்டு பேருந்து நிலையத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த 30-ஆம் தேதி திறந்துவைத்தார்.

தற்போது முதல்கட்டமாக கிளாம்பக்கம் பேருந்து நிலையத்தில் இருந்து தென்மாவட்ட முக்கிய நகரங்களுக்கு 164 அரசு விரைவுப் பேருந்துகளும், சென்னையில் உள்ள முக்கிய இடங்களுக்கு மாநகரப் பேருந்துகளும் இயக்கப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில், கோயம்பேட்டில் இருந்து கிளாம்பக்கம் புதிய பேருந்து நிலையம் சுமார் 32 கி.மீ. தொலைவில் முன்னதாகவே இருப்பதால், கிளாம்பக்கத்தில் இருந்து வெளியூர்களுக்கு இயக்கப்படும் பேருந்துகளின் கட்டணம் குறைக்கப்பட்டுள்ளது.

கோயம்பேட்டில் இருந்து தென் மாவட்டங்களுக்கு வசூலிக்கப்படும் கட்டணத்தைவிட ரூ. 20 முதல் 35 வரை கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திலிருந்து இயக்கப்படும் பேருந்துகளில் கட்டணம் குறைக்கப்பட்டுள்ளது.

மேலும், அரசு விரைவுப் பேருந்துகளில் ஒரு மாதத்திற்கு முன்னதாகவே முன்பதிவு செய்தவர்களுக்கு நடத்துநர்கள் மூலம் குறைக்கப்பட்ட தொகையை திருப்பி அளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.