பொங்கல் பொது விடுமுறையை முன்னிட்டு திங்கள்கிழமை (ஜன.15) சென்னை புறநகர் மின்சார ரயில்கள் ஞாயிற்றுக்கிழமை அட்டவணைப்படி இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து தெற்கு ரயில்வே சென்னை கோட்டம் சாா்பில் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
பொது விடுமுறை நாள்களில் சென்னை புறநகர் மின்சார ரயில்கள் ஞாயிற்றுக்கிழமை அட்டவணைப்படி இயக்கப்படுவது வழக்கம்.
அந்த வகையில், பொங்கல் பண்டிகை விடுமுறையை முன்னிட்டு திங்கள்கிழமை சென்னை புறநகர் மின்சார ரயில்கள் ஞாயிற்றுக்கிழமை அட்டவணைப்படி இயக்கப்படும்.
இதையும் படிக்க: குழந்தையைக் கொன்ற சுசனா நாட்டை உலுக்கியது எதனால்?
அதன்படி, சென்ட்ரல்-அரக்கோணம், சென்ட்ரல்-சூலூா்பேட்டை, கடற்கரை- செங்கல்பட்டு மற்றும் விரைவு மின்சார ரயில்கள் அனைத்தும் ஞாயிற்றுக்கிழமை கால அட்டவணைப்படி இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.