மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

தஞ்சாவூரில் கடும் பனிப்பொழிவு 

தஞ்சாவூரில் ஞாயிற்றுக்கிழமை காலை நிலவிய கடும் பனிப்பொழிவால் பொதுமக்கள் பெரும் சிரமத்துக்கு ஆளாகினர்.

News image

தஞ்சாவூரில் ஞாயிற்றுக்கிழமை காலை நிலவிய கடும் பனிப்பொழிவால் மங்கலாக தெரிந்த பெரியகோயில்.

Updated On :14 ஜனவரி 2024, 5:43 am

தஞ்சாவூர்: தஞ்சாவூரில் ஞாயிற்றுக்கிழமை காலை நிலவிய கடும் பனிப்பொழிவால் பொதுமக்கள் பெரும் சிரமத்துக்கு ஆளாகினர்.

தஞ்சாவூரில் கடந்த வாரம் பலத்த மழை பெய்த நிலையில் சில நாள்களாக பகலில் மிதமான வெப்பமும், இரவில் கடும் பனிப்பொழிவு இருந்து வருகிறது. ஆனால் காலை 6 மணிக்கு பிறகு பனிப்பொழிவு குறைந்துவிடும்.

இந்நிலையில் தஞ்சாவூர் மாநகரில் ஞாயிற்றுக்கிழமை நிலவிய கடும் பனிப்பொழிவு காரணமாக காலை 7 மணி கடந்தும் புகை மண்டலம் போல பனி படர்ந்து கிடந்தது.

இதனால், மாநகர மக்கள் சுமார் 50 மீட்டருக்கு அப்பால் எதுவும் தெரியாததால் பெரும் சிரமத்துக்கு ஆளாகினர். மேலும் கடும் குளிர் நிலவியதால் காலை நேரத்தில் வேலை செய்த பொதுமக்கள் அவதிப்பட்டனர்.

எதிரே வரும் வாகனங்கள் தெரியாமல் வாகன ஓட்டுநர்கள் பெரும் அவதிக்குள்ளாகினர். மாநகரில் 10 மணியை கடந்தும் பனியின் தாக்கம் தொடர்ந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.