சென்னை: நேதாஜியே தேசத் தந்தை என்று தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி கூறியுள்ளார்.
சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி, வேலு நாச்சியார், வ.உ.சி. போல நேதாஜியின் தியாகமும் போற்றப்பட வேண்டும். சுதந்திரப் போராட்டக் காலத்தில் காந்தியின் போராட்டம் பலன் அளிக்கவில்லை, நாம் சுதந்திரம் பெற்றதற்கு நேதாஜியின் போராட்டமே முக்கிய காரணம்.
இதையும் படிக்க..ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கு: நீதிமன்ற செலவு இத்தனை கோடியா?
இஸ்லாமிய தலைவர்களின் எண்ணப்படி 1947ல் நாடு இரண்டாகப் பிரிந்தது என்றும் ஆளுநர் பேசியுள்ளார்.
தொடர்ந்து பேசிய அவர், நாட்டின் தேசத் தந்தை மகாத்மா காந்தி அல்ல என்றும், நேதாஜியே தேசத் தந்தை என்றும் குறிப்பிட்டுள்ளார்.