புது தில்லி பிரகடனம் 2026: பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் ஒருமனதாக ஏற்பு!மின் தேவையை சமாளிக்க கூடுதல் மின்சாரம் கொள்முதல்: தமிழக அரசு அறிவிப்பு!புதிய தலைமைச் செயலகம் அமைக்கும் முடிவை தமிழக அரசு கைவிட வேண்டும்: சீமான் வலியுறுத்தல்!மதுரையில் அரசு மரியாதையுடன் சாலமன் பாப்பையா உடல் தகனம்!பிரிக்ஸ் மாநாடு: உக்ரைனில் ஐரோப்பிய படைகள், ரஷியா உடன் போருக்கு வழி! - புதின் எச்சரிக்கை!இந்திய தேர்தல் நடைமுறை உலகின் வெளிப்படையான நடைமுறைகளில் ஒன்று: தலைமைத் தேர்தல் ஆணையர்பிரிக்ஸ் உச்சி மாநாடு! சீன அதிபருடன் வரும் உணவு ருசி தேர்வாளர் குழு! ஆச்சரிய தகவல்தமிழறிஞர் சாலமன் பாப்பையாவுக்கு முழு அரசு மரியாதை!பிரிக்ஸ் உச்சி மாநாடு! தில்லி வந்தார் சீன அதிபர் ஜின்பிங்! வங்கிக் கடன் ஆவணங்களைப் பதிவு செய்ய புதிய நடைமுறை செப். 15 முதல் அமல் ஓட்டுநர் உரிமம், வாகனப் பதிவுச் சான்றிதழ் இனி ஆன்லைனில் பதிவிறக்கலாம்தில்லியில் இன்று பிரிக்ஸ் உச்சி மாநாடு தொடக்கம்: பிரதமா் மோடி, புதின், ஷி ஜின்பிங் உள்ளிட்ட தலைவா்கள் பங்கேற்பு6 சிறப்பு விரைவு ரயில்களுக்கு கால நீட்டிப்பு திருப்பதி திருக்குடை ஊா்வலம்: சென்னையில் நாளை போக்குவரத்து மாற்றம்நேபாளம்: மறுகட்டமைப்புக்கு ரூ.45,700 கோடி தேவை - வெளியுறவு அமைச்சகம்

ஒடிசா தம்பதியரின் குழந்தையைக் கடத்திய தமிழகத்தைச் சேர்ந்தவர் கைது!

கேரளம் சென்ற ரயிலில் ஒடிசா தம்பதியரின் குழந்தையைக் கடத்திய தமிழகத்தைச் சேர்ந்தவர் கைது

பிரதிப் படம் - ENS

Published On :

கேரளம் சென்ற ரயிலில் ஒடிசா தம்பதியரின் குழந்தையைக் கடத்திய தமிழகத்தைச் சேர்ந்தவரைக் காவல்துறையினர் கைது செய்தனர்.

ஒடிசாவைச் சேர்ந்த தம்பதியர், பணிநிமித்தம் காரணமாக ஒருவயது குழந்தையுடன் கேரளத்தில் உள்ள அலுவா நகருக்கு ரயிலில் சென்று கொண்டிருந்தனர். ரயிலில் குழந்தையுடன் தமிழகத்தைச் சேர்ந்த ஒருவர் விளையாடிக் கொண்டிருந்தார்.

இந்த நிலையில், குழந்தையின் பெற்றோர் தூங்கிய நேரத்தில், குழந்தையைக் கடத்திச் செல்ல முயன்ற தமிழகத்தைச் சேர்ந்தவர் ஒலவக்கோடு ரயில் நிலையத்தில் இறங்கினார். இருப்பினும், குழந்தையின் அழுகையையும், கடத்திச் சென்றவரின் நடவடிக்கையையும் கண்ட அப்பகுதியில் இருந்தவர்களும் ஆட்டோ ஓட்டுநர்களும் கடத்திச் சென்றவரிடம் விசாரித்தனர்.

இதனையடுத்து, அவர் ஏறுக்குமாறாய் பதிலளித்ததால், சந்தேகமடைந்து காவல்துறையினருக்கு தகவல் அளித்தனர். காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டதில், குழந்தையை அவர் கடத்தியிருப்பது தெரிய வந்தது.

இதனிடையே, தாங்கள் தூங்கிக் கொண்டிருந்தபோது குழந்தை காணாமல் போய்விட்டதாகக் கூறி, குழந்தையின் பெற்றோர் திருச்சூர் ரயில்வே காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதனைத் தொடர்ந்து, குழந்தை அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

குழந்தையைக் கடத்திச் சென்ற தமிழகத்தைச் சேர்ந்தவர் மீது வழக்குப்பதிவு செய்து, அவரை காவல்துறையினர் கைது செய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.