கேரளம் சென்ற ரயிலில் ஒடிசா தம்பதியரின் குழந்தையைக் கடத்திய தமிழகத்தைச் சேர்ந்தவரைக் காவல்துறையினர் கைது செய்தனர்.
ஒடிசாவைச் சேர்ந்த தம்பதியர், பணிநிமித்தம் காரணமாக ஒருவயது குழந்தையுடன் கேரளத்தில் உள்ள அலுவா நகருக்கு ரயிலில் சென்று கொண்டிருந்தனர். ரயிலில் குழந்தையுடன் தமிழகத்தைச் சேர்ந்த ஒருவர் விளையாடிக் கொண்டிருந்தார்.
இந்த நிலையில், குழந்தையின் பெற்றோர் தூங்கிய நேரத்தில், குழந்தையைக் கடத்திச் செல்ல முயன்ற தமிழகத்தைச் சேர்ந்தவர் ஒலவக்கோடு ரயில் நிலையத்தில் இறங்கினார். இருப்பினும், குழந்தையின் அழுகையையும், கடத்திச் சென்றவரின் நடவடிக்கையையும் கண்ட அப்பகுதியில் இருந்தவர்களும் ஆட்டோ ஓட்டுநர்களும் கடத்திச் சென்றவரிடம் விசாரித்தனர்.
இதனையடுத்து, அவர் ஏறுக்குமாறாய் பதிலளித்ததால், சந்தேகமடைந்து காவல்துறையினருக்கு தகவல் அளித்தனர். காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டதில், குழந்தையை அவர் கடத்தியிருப்பது தெரிய வந்தது.
இதனிடையே, தாங்கள் தூங்கிக் கொண்டிருந்தபோது குழந்தை காணாமல் போய்விட்டதாகக் கூறி, குழந்தையின் பெற்றோர் திருச்சூர் ரயில்வே காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதனைத் தொடர்ந்து, குழந்தை அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
குழந்தையைக் கடத்திச் சென்ற தமிழகத்தைச் சேர்ந்தவர் மீது வழக்குப்பதிவு செய்து, அவரை காவல்துறையினர் கைது செய்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
மதுபாட்டில்கள் கடத்திய இருவா் கைது
மணல் கடத்திய இருவா் கைது

சாத்தான்குளத்தில் விஏஓ-வின் வீடு புகுந்து குழந்தையைக் கடத்த முயற்சி: பெண் கைது
காரில் மதுபாட்டில்களை கடத்திய அதிமுக நிா்வாகி உள்ளிட்ட இருவா் கைது
வீடியோக்கள்
இண்டியா கூட்டணியில் தவெக சேர்ந்தால்...: கனிமொழி சோமு Exclusive
தினமணி செய்திச் சேவை
பிளே ஆஃப் சுற்று: சிஎஸ்கே என்ன செய்ய வேண்டும்? | Chennai Super Kings |
தினமணி செய்திச் சேவை
"நன்றிகெட்ட Congress கட்சி”: விளாசிய DMK ஆர்.எஸ்.பாரதி
தினமணி செய்திச் சேவை

தவெகவுக்கு காங்கிரஸ் ஆதரவு தெரிவிப்பது குறித்து மாணிக்கம் தாகூர்! | TVK | Congress
இணையதளச் செய்திப் பிரிவு


