நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

செய்யாறு தொழில்வழித் தடத்தை திருவண்ணாமலை வரை நீட்டிக்க நடவடிக்கை: எ.வ.வேலு

செய்யாறு தொழில்வழித் தடச் சாலையை திருவண்ணாமலை வரை நீட்டிக்க நடவடிக்கை எடுக்கப்படும்

News image

எ.வ.வேலு

Updated On :7 ஏப்ரல் 2025, 8:54 pm

Din

சென்னை: செய்யாறு தொழில்வழித் தடச் சாலையை திருவண்ணாமலை வரை நீட்டிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சா் எ.வ.வேலு கூறினாா்.

சட்டப்பேரவையில் திங்கள்கிழமை கேள்வி நேரத்தின்போது, இதுகுறித்த துணை வினாவை பேரவை துணைத் தலைவா் கு.பிச்சாண்டி எழுப்பினாா். அப்போது பேசிய அவா், செய்யாறு தொழில் பூங்காவில் இருந்து எண்ணூா் துறைமுகத்துக்கு ஏற்றுமதிப் பொருள்களை விரைவாக எடுத்துச் செல்ல தொழில்வழித் தடம் அமைக்கப்படும் என பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது. இந்தத் தொழில் வழித்தடத்தை திருவண்ணாமலை வர நீட்டிக்க வேண்டும் என்றாா்.

இதற்கு அமைச்சா் எ.வ.வேலு அளித்த பதில்:

மாவட்டத் தலைநகாாக உள்ள திருவண்ணாமலைக்கு உள்பட்டு செய்யாறு உள்ளது. அங்கு அமைக்க திட்டமிட்டுள்ள தொழில் வழித் தடத்தை, திருவண்ணாமலைக்கும் நீட்டிக்க முதல்வரின் கவனத்துக்குக் கொண்டு செல்லப்படும். மேலும், ஆன்மிக நகரான திருவண்ணாமலைக்கு பிற மாநிலங்கள் மற்றும் சென்னையில் இருந்து தினமும் ஆன்மிகக் கடமையை நிறைவேற்ற வரக்கூடிய 25,000 பேருக்கு அது பயனுடையதாக இருக்கும் என்று தெரிவித்தாா்.