சுற்றுலாப் பயணிகள் அதிகரிப்பு: கொடைக்கானலில் போக்குவரத்து நெரிசல்!

தொடர் விடுமுறையால் கொடைக்கானலுக்கு சுற்றுலாப் பயணிகள் அதிகரித்ததால் போக்குவரத்து நெரிசல்.
நீண்ட வரிசையில் காத்திருக்கும் வாகனங்கள்...
நீண்ட வரிசையில் காத்திருக்கும் வாகனங்கள்...
Published on
Updated on
1 min read

தொடர் விடுமுறை காரணமாக கொடைக்கானலுக்குச் செல்லும் சுற்றுலாப் பயணிகள் எண்ணிக்கை அதிகரித்ததால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலுக்கு மகாவீர் ஜெயந்தி, சனி, ஞாயிறு வார விடுமுறை, சித்திரை முதல் தேதியான தமிழ் புத்தாண்டு விடுமுறை என தொடர்ந்து அரசு விடுமுறை தினங்களால் சுற்றுலாப் பயணிகள் வருகை கடந்த நான்கு நாட்களாக அதிகரித்து காணப்பட்டது.

12 மைல் சுற்றுச்சாலையில் உள்ள சுற்றுலாத் தலங்களை காண அதிக வாகனங்களில் சுற்றுலாப் பயணிகள் சென்றதால், போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால் நீண்டவரிசையில் வாகனங்கள் காத்திருந்தன.

ஏரிச்சாலையைச் சுற்றி வாகனங்கள் அதிகம் நிறுத்தப்பட்டிருந்தன. கடும் போக்குவரத்து நெரிசலால் ஒருநாள் சுற்றுலா வந்தவர்கள் முழுமையாக கொடைக்கானலில் உள்ள சுற்றுலாத் தலங்களை சுற்றிப்பார்க்க முடியாதநிலை ஏற்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com