சுகாதார ஆய்வாளா்கள் நியமனம்: தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவுதோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுசென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்விளாதிகுளத்தில் 12 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொலைதிமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

கல்வியை மாநில பட்டியலின்கீழ் கொண்டு வருவது அவசியம்: பேரவையில் முதல்வர் ஸ்டாலின்

தேசிய கல்வி கொள்கையை எதிர்ப்பதால் தமிழ்நாட்டுக்கு ரூ.2,500 கோடி விடுவிக்கப்படவில்லை: முதல்வர் ஸ்டாலின்

News image
Updated On :15 ஏப்ரல் 2025, 6:11 am

DIN

சென்னை: தேசிய கல்வி கொள்கை, நீட் தேர்வு, ஹிந்தி திணிப்பை தொடர்ந்து எதிர்த்து வருகிறோம் என்று முதல்வர் மு. க. ஸ்டாலின் இன்று (ஏப். 15) சட்டப்பேரவையில் பேசினார்.

5 நாள்கள் விடுமுறைக்குப் பிறகு, பேரவை செவ்வாய்க்கிழமை மீண்டும் காலை கூடியதும், மாநில சுயாட்சி தொடர்பான அறிவிப்புகளை முதல்வர் மு. க. ஸ்டாலின் வெளியிட்டார்.

மாநில சுயாட்சி தொடர்பாக முதல்வர் மு.க. ஸ்டாலின் 110-ஆவது விதியின் கீழ் அறிக்கை வெளியிட்டு வாசித்தார். அப்போது, மாநில உரிமைகளை பாதுகாக்க ஓய்வுபெற்ற நீதிபதி ஜோசப் குரியன் தலைமையில் உயர்நிலைக் குழு அமைக்கப்படும் என்று சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

மேலும், அவர் பேசுகையில், நீட் தேர்வால் மாணவர்கள் பலர் உயிரிழந்திருப்பதை சுட்டிக்காட்டி பேசிய முதல்வர், நாங்கள்(திமுக) இத்தேர்வை தொடர்ந்து எதிர்த்து வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

மும்மொழிக் கொள்கை என்கிற பெயரில் மத்திய அரசு தமிழ்நாட்டில் ஹிந்தியை திணிக்கப் பார்ப்பதாகவும் விமர்சித்தார்.

தேசிய கல்வி கொள்கையை எதிர்ப்பதால் தமிழ்நாட்டுக்கு ரூ.2,500 கோடி நிதியை மத்திய அரசு விடுவிக்க மறுப்பதாக பேசிய முதல்வர், இதனையடுத்து, கல்வியை மாநில பட்டியலில் கொண்டு வருவது அவசியம் என்றும் எடுத்துரைத்தார்.

மாநில உரிமைகளை பாதுகாக்க அமைக்கப்படும் உயர்நிலைக் குழுவுக்கு உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி ஜோசப் குரியன் தலைமை வகிப்பார்.

பணி ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி அஷோக் வர்தன் ஷெட்டி (இந்திய கடல்சார் பல்கலைக்கழகக் முன்னாள் துணை வேந்தர்) மற்றும் பேராசிரியர் எம். நாகநாதன் (தமிழ்நாடு மாநில திட்ட ஆணையத்தின் முன்னாள் துணை தலைவர்) ஆகியோர் இக்குழு உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.