ஈஸ்டர் திருநாள் திருநாளை முன்னிட்டு தமிழகத்தில் உள்ள கிறிஸ்துவ தேவாலங்களில் சிறப்புப் பிரார்த்தனைகள் நடைபெற்று வருகின்றன.
இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டு மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்த நாளை உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்துவர்கள் ஈஸ்டர் நாள் விழாவாக கொண்டாடி வருகின்றனர்.
அந்த வகையில் இன்று(ஏப். 20) ஈஸ்டர் பண்டிகை கொண்டாடப்பட்டு வரும் நிலையில், தேவாலயங்களில் நள்ளிரவில் கூட்டுப் பிரார்த்தனை நிகழ்ச்சி நடைபெற்றது.
அதன் ஒரு பகுதியாக கோவை டவுன்ஹால் பகுதியில் உள்ள புனித மைக்கேல் ஆதித்தூதர் பேராலயத்தில் பேராயர் தாமஸ் அக்வினாஸ் தலைமையில் ஈஸ்டர் கூட்டுப் பிரார்த்தனை நிகழ்ச்சி நடைபெற்றது.
அப்போது இயேசு கிறிஸ்துவின் 33 ஆண்டுகால வாழ்க்கை, அதில் இயேசு கிறிஸ்து போதித்தக் கருத்துகள், இயேசு கிறிஸ்து அனுபவித்த சித்தரவதைகள் மற்றும் இயேசு உயிர்த்தெழுந்த நிகழ்வுகள் ஆகியவை குறித்து தாமஸ் அக்வினாஸ் எடுத்துரைத்தார்.
தொடர்ந்து, நடைபெற்ற கூட்டு பிரார்த்தனையில் ஏராளமான கிறிஸ்துவர்கள் கலந்துகொண்டு கண்களை மூடி இயேசு கிறிஸ்துவை பிரார்த்தித்தனர்.
இதையும் படிக்க: அமெரிக்காவில் ராகுல் காந்தி!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
மரங்கள் இல்லை! ஆயிரம் கற்சிலைகளுடன் ஒரு மர்மத் தீவு!
ஈஸ்டர் தொடர் குண்டுவெடிப்பு விசாரணை: முன்னாள் இலங்கை அதிபருக்கு பயணத் தடை!

பக்ரீத் பண்டிகை: திரளான இஸ்லாமியா்கள் சிறப்புத் தொழுகை

பக்ரீத் பண்டிகை: இஸ்லாமியா்கள் சிறப்புத் தொழுகை
விடியோக்கள்

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!

Podcast | முதல்வர் விஜய் பதில்; திமுக வெளிநடப்பு: பேரவையில் நடந்தது என்ன? | News & Views | Epi 47



