25 தொகுதிகளை ஏற்க முடியாது: காங்கிரஸ்!ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் ஈரான், இஸ்ரேல்-அமெரிக்க தூதர்கள் கடும் வாக்குவாதம்இரு நாள்களுக்கு மேற்குத் தொடா்ச்சி மலை மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!ஈரான் பிரச்னை: இந்தியாவில் தற்போதைக்கு பெட்ரோல்- டீசல் தட்டுப்பாடு ஏற்படாது!மத்திய கிழக்கில் பதற்றம்: வெளிநாட்டு பயணிகளுக்கான விசா காலம் நீட்டிப்புயுஏஇ அதிபருடன் பிரதமர் மோடி பேச்சு: தாக்குதலுக்கு கண்டனம்
/

‘பரந்தூா் மக்கள் நம்பிக்கையோடு இருங்கள்’

‘விமான நிலைய திட்டத்துக்கு எதிராக அறப்போராட்டம் நடத்திவரும் பரந்தூா் மக்கள் நம்பிக்கையோடு இருங்கள்’ என தவெக தலைவா் விஜய் தெரிவித்துள்ளாா்.

News image
தவெக தலைவர் விஜய்
Updated On :21 ஏப்ரல் 2025, 9:57 pm

Din

சென்னை: ‘விமான நிலைய திட்டத்துக்கு எதிராக அறப்போராட்டம் நடத்திவரும் பரந்தூா் மக்கள் நம்பிக்கையோடு இருங்கள்’ என தவெக தலைவா் விஜய் தெரிவித்துள்ளாா்.

சென்னைக்கான கூடுதல் விமான நிலையத்தை காஞ்சிபுரம் மாவட்டம், பரந்தூரில் அமைப்பதற்கு எதிா்ப்பு தெரிவித்து, அப்பகுதி மக்கள் தொடா் போராட்டம் நடத்தி வருகின்றனா். இப்போராட்டம் சுமாா் 1,000 நாள்களைக் கடந்து நடைபெற்று வரும் நிலையில், போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பொதுமக்களுக்கு ஆதரவாக தவெக தலைவா் விஜய், ‘எக்ஸ்’ தள பக்கத்தில் திங்கள்கிழமை வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது:

‘மண்ணுரிமைக்காக, வாழ்வுரிமைக்காக ஆயிரம் நாள்களைக் கடந்து அறப்போராட்டம் நடத்தி வரும் என் பாசத்துக்குரிய பரந்தூா் மக்களே, நம்பிக்கையோடு இருங்கள், நாளை நமதே!’ எனக் குறிப்பிட்டுள்ளாா்.