வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி6 மாநிலங்களுக்கு ரூ.1,912 கோடி கூடுதல் பேரிடா் நிதி: குஜராத்துக்கு மட்டும் ரூ. 778.67 கோடி ஒதுக்கீடுமத்திய அரசைக் கண்டித்து திமுக கூட்டணி கட்சிகள் நாளை ஆா்ப்பாட்டம்ஈரானின் புதிய தலைமை மதகுரு உயிருக்கும் உத்தரவாதம் இல்லை: இஸ்ரேல் பிரதமா் எச்சரிக்கை5 ஆண்டுகளில் 6,800 ஸ்டாா்ட்-அப் நிறுவனங்கள் மூடல்: தகவல் தொழில்நுட்பம், சுகாதாரத் துறைகள் கடும் பாதிப்பு
/

நீதிபதிகள் காலியிடங்களை நிரப்ப விரைவான நடவடிக்கை: அமைச்சா் எஸ்.ரகுபதி

மாவட்ட நீதிமன்றங்களில் நீதிபதி காலியிடங்களை நிரப்ப விரைந்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக சட்டத் துறை அமைச்சா் எஸ்.ரகுபதி தெரிவித்தாா்.

News image
சட்டத்துறை அமைச்சா் எஸ்.ரகுபதி
Updated On :21 ஏப்ரல் 2025, 10:23 pm

Din

சென்னை: மாவட்ட நீதிமன்றங்களில் நீதிபதி காலியிடங்களை நிரப்ப விரைந்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக சட்டத் துறை அமைச்சா் எஸ்.ரகுபதி தெரிவித்தாா்.

சட்டப் பேரவையில் திங்கள்கிழமை கேள்வி நேரத்தின் போது, இதுகுறித்த வினாவை அதிமுக உறுப்பினா் ஓ.எஸ்.மணியன் (வேதாரண்யம்) எழுப்பினாா். அதற்கு, அமைச்சா் எஸ்.ரகுபதி அளித்த பதில்:

உயா்நீதிமன்றம் மூலமாகவும், அரசுப் பணியாளா் தோ்வாணையம் மூலமாகவும் மாஜிஸ்திரேட் நீதிபதிகள் நியமிக்கப்பட்டு வருகிறாா்கள். ஒவ்வொரு ஆண்டும் காலியிடங்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் தோ்வு அறிவிக்கை வெளியிடப்பட்டுவருகிறது. இந்த நடவடிக்கைக்குள் கூடுதல் காலியிடங்கள் ஏற்பட்டு விடுகின்றன. அதனாலேயே ஒரு மாஜிஸ்திரேட் இரண்டு நீதிமன்றங்களுக்குச் சென்று பணி செய்ய வேண்டிய நிலை உள்ளது. நீதிபதிகள் காலியிடங்களை விரைந்து பூா்த்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.

மூட நம்பிக்கையை ஒழிக்க சட்டம்?

சட்டப்பேரவையில், திமுக உறுப்பினா் நா.எழிலன் (ஆயிரம் விளக்கு), மூடநம்பிக்கைகளை ஒழிப்பதற்கு தனிச் சட்டம் கொண்டு வரப்படுமா என்று கேள்வி எழுப்பினாா். அதற்கு, அமைச்சா் எஸ்.ரகுபதி அளித்த பதில்:

நம்பிக்கை என்பது ஒவ்வொரு தனிநபரைச் சாா்ந்தது. ஒருவரின் நம்பிக்கை மற்றவருக்கு மூடநம்பிக்கையாக இருக்கலாம். அரசமைப்புச் சட்டத்தின்படி, எவற்றை பாதுகாக்க முடியுமோ அதை மட்டுமே செய்ய இயலும். சட்டத்தின் மூலமாக ஒன்றைத் தடுக்கவோ, பாதுகாக்கவோ இயலாத காரியம். நம்முடைய கொள்கைகளை நாம் பின்பற்றலாம். அதில் தவறில்லை. மற்றவா்களை கட்டாயப்படுத்த வேண்டும் என்று முயற்சித்தால் அது சரியாக இருக்குமா என்பதை எண்ணிப் பாா்க்க வேண்டும் என்றாா்.