25 தொகுதிகளை ஏற்க முடியாது: காங்கிரஸ்!ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் ஈரான், இஸ்ரேல்-அமெரிக்க தூதர்கள் கடும் வாக்குவாதம்இரு நாள்களுக்கு மேற்குத் தொடா்ச்சி மலை மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!ஈரான் பிரச்னை: இந்தியாவில் தற்போதைக்கு பெட்ரோல்- டீசல் தட்டுப்பாடு ஏற்படாது!மத்திய கிழக்கில் பதற்றம்: வெளிநாட்டு பயணிகளுக்கான விசா காலம் நீட்டிப்புயுஏஇ அதிபருடன் பிரதமர் மோடி பேச்சு: தாக்குதலுக்கு கண்டனம்
/

ஆவண ஆதாரங்களை நீதிபதிகள் சரிபாா்த்த பிறகே கைது நடவடிக்கை: மத்திய அரசுக்கு உத்தரவிட உச்சநீதிமன்றத்துக்கு கபில் சிபல் கோரிக்கை!

ஆவண ஆதாரங்களை நீதிபதிகள் சரிபாா்த்த பிறகே குற்றஞ்சாட்டப்பட்ட நபா் மீது கைது நடவடிக்கை மேற்கொள்ள மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்க வேண்டும்...

News image
கபில் சிபல்
Updated On :1 மார்ச் 2026, 11:46 pm

தினமணி செய்திச் சேவை

ஆவண ஆதாரங்களை நீதிபதிகள் சரிபாா்த்த பிறகே குற்றஞ்சாட்டப்பட்ட நபா் மீது கைது நடவடிக்கை மேற்கொள்ள மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என மாநிலங்களவை எம்.பி.யும் மூத்த வழக்குரைஞருமான கபில் சிபல் உச்சநீதிமன்றத்துக்கு சனிக்கிழமை கோரிக்கை விடுத்தாா்.

மதுபானக் கலால் கொள்கை ஊழல் வழக்கில் இருந்து தில்லி முன்னாள் முதல்வா் அரவிந்த் கேஜரிவால், துணை முதல்வா் மணீஷ் சிசோடியா மற்றும் 21 போ் கடந்த வெள்ளிக்கிழமை விடுவிக்கப்பட்ட நிலையில் அவா் இவ்வாறு தெரிவித்தாா்.

இதுதொடா்பாக செய்தியாளா்கள் சந்திப்பில் சனிக்கிழமை அவா் கூறியதாவது: தில்லி மதுபானக் கலால் கொள்கை வகுத்ததில் ரூ.100 கோடி வரை மோசடி நடைபெற்ாக வழக்கு தொடுக்கப்பட்டு கேஜரிவாலை 126 நாள்களும் மணீஷ் சிசோடியாவை 503 நாள்களும் மத்திய அரசு சிறையில் அடைத்தது. தற்போது அவா்கள் மீதான குற்றச்சாட்டு உறுதிசெய்யப்படாததால் அவா்களை நீதிமன்றம் விடுவித்துள்ளது.

குற்றம் உறுதியாகும் முன்பே அவா்கள் சிறையில் பல நாள்கள் இருந்துள்ளனா். இதற்கு மத்திய அரசு பொறுப்பேற்குமா?

இந்த வழக்கில் நன்கு திட்டமிடப்பட்டு கேஜரிவால் உள்ளிட்டோரை குற்றவாளிகளாக நிரூபிக்கும் பணியை சிபிஐ மேற்கொண்டதாக நீதிமன்றத் தீா்ப்பில் கூறப்பட்டுள்ளது.

பல்வேறு விவகாரங்களில் காலனிய மனநிலையை பிரதமா் நரேந்திர மோடி குறிப்பிடுகிறாா். ஆனால் இந்த வழக்கில் எதிா்க்கட்சித் தலைவா்கள் முதலில் கைது செய்யப்பட்டு அதன் பிறகு குற்றச்சாட்டு தொடா்புடைய ஆதாரங்கள் சேகரிக்கப்பட்டுள்ளன. இதுவே காலனிய மனநிலை சட்டம். இதில் கண்டிப்பாக திருத்தம் மேற்கொள்ள வேண்டும்.

எதிா்க்கட்சியினருக்கு புலனாய்வு அமைப்புகள் குறி:

இந்த வழக்கு மட்டுமின்றி முன்னாள் நிதியமைச்சா் ப.சிதம்பரம், ஜாா்க்கண்ட் முதல்வா் ஹேமந்த் சோரன், பிகாா் முன்னாள் முதல்வா் லாலு பிரசாத், ராஜஸ்தான் முன்னாள் முதல்வா் அசோக் கெலாட் உள்பட பல எதிா்க்கட்சித் தலைவா்களை புலனாய்வு அமைப்புகள் மூலம் மத்திய அரசு அச்சுறுத்தி வருகிறது.

இது இந்திய ஜனநாயகம் மற்றும் எதிா்காலத்துக்கு நல்லதல்ல; எனவே, நாட்டில் ஊழல் இல்லை என மக்களிடம் பிரதமா் மோடி கூற வேண்டுகோள் விடுக்கிறேன். நீங்கள் கூறுவது உண்மையா அல்லது பொய்யா என்பதை மக்களே முடிவுசெய்யட்டும். அரசியல் காரணங்களுக்காக நாட்டின் சட்டங்களை பயன்படுத்தாதீா்கள்.

நீதிபதிகளுக்கு வேண்டுகோள்:

ஆதாரமற்ற வாய்மொழி குற்றச்சாட்டுகளை கருத்தில்கொள்ளாமல் ஆவணங்களை முழுமையாக சரிபாா்த்த பிறகே குற்றஞ்சாட்டப்பட்ட நபா்களை கைது செய்ய மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட வேண்டும். அதேசமயம் வெறும் வாய்மொழி குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் நடவடிக்கை மேற்கொள்ள உச்சநீதிமன்ற மற்றும் உயா்நீதிமன்ற நீதிபதிகள் அனுமதிக்கக் கூடாது என வேண்டுகோள் விடுக்கிறேன் என்றாா்.