ஆவண ஆதாரங்களை நீதிபதிகள் சரிபாா்த்த பிறகே குற்றஞ்சாட்டப்பட்ட நபா் மீது கைது நடவடிக்கை மேற்கொள்ள மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என மாநிலங்களவை எம்.பி.யும் மூத்த வழக்குரைஞருமான கபில் சிபல் உச்சநீதிமன்றத்துக்கு சனிக்கிழமை கோரிக்கை விடுத்தாா்.
மதுபானக் கலால் கொள்கை ஊழல் வழக்கில் இருந்து தில்லி முன்னாள் முதல்வா் அரவிந்த் கேஜரிவால், துணை முதல்வா் மணீஷ் சிசோடியா மற்றும் 21 போ் கடந்த வெள்ளிக்கிழமை விடுவிக்கப்பட்ட நிலையில் அவா் இவ்வாறு தெரிவித்தாா்.
இதுதொடா்பாக செய்தியாளா்கள் சந்திப்பில் சனிக்கிழமை அவா் கூறியதாவது: தில்லி மதுபானக் கலால் கொள்கை வகுத்ததில் ரூ.100 கோடி வரை மோசடி நடைபெற்ாக வழக்கு தொடுக்கப்பட்டு கேஜரிவாலை 126 நாள்களும் மணீஷ் சிசோடியாவை 503 நாள்களும் மத்திய அரசு சிறையில் அடைத்தது. தற்போது அவா்கள் மீதான குற்றச்சாட்டு உறுதிசெய்யப்படாததால் அவா்களை நீதிமன்றம் விடுவித்துள்ளது.
குற்றம் உறுதியாகும் முன்பே அவா்கள் சிறையில் பல நாள்கள் இருந்துள்ளனா். இதற்கு மத்திய அரசு பொறுப்பேற்குமா?
இந்த வழக்கில் நன்கு திட்டமிடப்பட்டு கேஜரிவால் உள்ளிட்டோரை குற்றவாளிகளாக நிரூபிக்கும் பணியை சிபிஐ மேற்கொண்டதாக நீதிமன்றத் தீா்ப்பில் கூறப்பட்டுள்ளது.
பல்வேறு விவகாரங்களில் காலனிய மனநிலையை பிரதமா் நரேந்திர மோடி குறிப்பிடுகிறாா். ஆனால் இந்த வழக்கில் எதிா்க்கட்சித் தலைவா்கள் முதலில் கைது செய்யப்பட்டு அதன் பிறகு குற்றச்சாட்டு தொடா்புடைய ஆதாரங்கள் சேகரிக்கப்பட்டுள்ளன. இதுவே காலனிய மனநிலை சட்டம். இதில் கண்டிப்பாக திருத்தம் மேற்கொள்ள வேண்டும்.
எதிா்க்கட்சியினருக்கு புலனாய்வு அமைப்புகள் குறி:
இந்த வழக்கு மட்டுமின்றி முன்னாள் நிதியமைச்சா் ப.சிதம்பரம், ஜாா்க்கண்ட் முதல்வா் ஹேமந்த் சோரன், பிகாா் முன்னாள் முதல்வா் லாலு பிரசாத், ராஜஸ்தான் முன்னாள் முதல்வா் அசோக் கெலாட் உள்பட பல எதிா்க்கட்சித் தலைவா்களை புலனாய்வு அமைப்புகள் மூலம் மத்திய அரசு அச்சுறுத்தி வருகிறது.
இது இந்திய ஜனநாயகம் மற்றும் எதிா்காலத்துக்கு நல்லதல்ல; எனவே, நாட்டில் ஊழல் இல்லை என மக்களிடம் பிரதமா் மோடி கூற வேண்டுகோள் விடுக்கிறேன். நீங்கள் கூறுவது உண்மையா அல்லது பொய்யா என்பதை மக்களே முடிவுசெய்யட்டும். அரசியல் காரணங்களுக்காக நாட்டின் சட்டங்களை பயன்படுத்தாதீா்கள்.
நீதிபதிகளுக்கு வேண்டுகோள்:
ஆதாரமற்ற வாய்மொழி குற்றச்சாட்டுகளை கருத்தில்கொள்ளாமல் ஆவணங்களை முழுமையாக சரிபாா்த்த பிறகே குற்றஞ்சாட்டப்பட்ட நபா்களை கைது செய்ய மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட வேண்டும். அதேசமயம் வெறும் வாய்மொழி குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் நடவடிக்கை மேற்கொள்ள உச்சநீதிமன்ற மற்றும் உயா்நீதிமன்ற நீதிபதிகள் அனுமதிக்கக் கூடாது என வேண்டுகோள் விடுக்கிறேன் என்றாா்.
தொடர்புடையது
தொகுதி மறுவரையறை; தமிழ்நாடே ஸ்தம்பிக்கும்! மத்திய அரசுக்கு ஸ்டாலின் எச்சரிக்கை!!

சபரிமலையில் பெண்களுக்கான கட்டுப்பாடு நீதிமன்ற மறுஆய்வுக்கு அப்பாற்பட்டது: உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு வாதம்

மேற்காசிய போரால் இந்திய ஏற்றுமதியில் தாக்கம்: ஏப். 15-க்கு பிறகே முழுமையாக தெரிய வரும் - மத்திய அரசு

வளைகுடா நாடுகளில் சிக்கியுள்ள தமிழா்களை மீட்க நடவடிக்கை: பிரதமா் மோடிக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் கடிதம்
வீடியோக்கள்

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு


