வாக்காளர் பட்டியலில் இப்போதுகூட பெயர் சேர்க்கலாம்! தலைமைத் தேர்தல் ஆணையர் தகவல்ஜெயலலிதா வாழ்நாள் முழுவதும் எதிர்த்த கட்சியில் ஓபிஎஸ்: தமிழிசை கடும் விமர்சனம்!தில்லி மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கு: கேஜரிவால், சிசோடியா விடுவிப்பு! சர்வாதிகாரி பழனிசாமி இனி எந்தக் காலத்திலும் வெற்றி பெறமாட்டார்: ஓபிஎஸ் காட்டம்!அன்பானவர், பண்பானவர் ஓபிஎஸ்; திமுக கூட்டணியில் ஜனநாயக சக்திகள்! - மு.க. ஸ்டாலின்எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்தார் ஓ. பன்னீர்செல்வம்! திமுக துணைப் பொதுச் செயலாளர் ஓபிஎஸ்? போடியில் மீண்டும் போட்டி? திமுகவில் இணைந்தார் ஓ. பன்னீர்செல்வம்! ஆடம்பரத்தைத் தவிர்த்திடுவீர்! பிறந்த நாளையொட்டி கட்சியினருக்கு முதல்வர் ஸ்டாலின் அறிவுரை! சட்டப்பேரவைத் தோ்தல்: அமலாக்கத் துறை தலைமை இயக்குநா் இன்று ஆலோசனை
/

எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான அவதூறு வழக்கு: விசாரணைக்கு உயா்நீதிமன்றம் இடைக்காலத் தடை

அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமிக்கு எதிரான அவதூறு வழக்கு விசாரணைக்கு இடைக்காலத் தடை விதித்து சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

News image
எடப்பாடி பழனிசாமி
Updated On :24 ஏப்ரல் 2025, 9:33 pm

Din

அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமிக்கு எதிரான அவதூறு வழக்கு விசாரணைக்கு இடைக்காலத் தடை விதித்து சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

எடப்பாடி கே.பழனிசாமி தனக்கு எதிராக அவதூறு கருத்துகளைத் தெரிவித்ததாக முன்னாள் அதிமுக நாடாளுமன்ற உறுப்பினா் கே.சி.பழனிசாமி கோவை மாவட்ட நீதிமன்றத்தில் அவதூறு வழக்கை தாக்கல் செய்தாா். இந்த வழக்கை விசாரித்த கோவை மாவட்ட நீதிமன்றம், விசாரணைக்காக நேரில் ஆஜராகும்படி, எடப்பாடி பழனிசாமிக்கு அழைப்பாணை அனுப்ப உத்தரவிட்டது.

இந்த நிலையில், தனக்கு எதிரான அவதூறு வழக்கை ரத்து செய்யக் கோரியும், கோவை நீதிமன்றத்தில் நேரில் ஆஜராவதிலிருந்து விலக்கு அளிக்கக் கோரியும் எடப்பாடி பழனிசாமி தரப்பில் சென்னை உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஜி.கே.இளந்திரையன், எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான அவதூறு வழக்கின் விசாரணைக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டாா். மேலும், இந்த வழக்கு விசாரணைக்கு கோவை மாவட்ட நீதிமன்றத்தில் நேரில் ஆஜராவதிலிருந்து விலக்கு அளித்து, 4 வாரங்களுக்குள் மனுவுக்கு பதில் அளிக்கும்படி மனுதாரா் எடப்பாடி கே.சி.பழனிசாமிக்கு உத்தரவிட்டு, விசாரணையை ஒத்திவைத்தாா்.