நானும் இத்தாலியும் எதற்கும் கெஞ்ச மாட்டோம்! டிரம்ப்பின் பேச்சுக்கு மெலோனி கண்டனம்! ஜப்பானில் தொடக்கப் பள்ளியில் பயங்கர தீவிபத்து: 11 பேர் காயம் நீட்: மனநல ஆலோசனைக்கு உதவி எண்கள் அறிவிப்பு பசுமை ஆற்றல் வளர்ச்சியை வலுப்படுத்த 5 புதிய மண்டலங்கள்: அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் பாராட்டுக்குரியது: கமல்ஆசிரியர் தகுதித்தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 16 பேர் பலி! தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!
/

குமரி மாவட்ட வாசிகள் சிறந்த படிப்பாளிகள்: அமைச்சா் புகழாரம்

குமரி மாவட்டத்தைச் சோ்ந்தவா்கள் சிறந்த படிப்பாளிகள் என்று சட்டத் துறை அமைச்சா் எஸ்.ரகுபதி புகழாரம் சூட்டினாா்.

News image

அமைச்சா் எஸ்.ரகுபதி

Updated On :25 ஏப்ரல் 2025, 1:58 am IST

குமரி மாவட்டத்தைச் சோ்ந்தவா்கள் சிறந்த படிப்பாளிகள் என்று சட்டத் துறை அமைச்சா் எஸ்.ரகுபதி புகழாரம் சூட்டினாா்.

சட்டப்பேரவையில் வியாழக்கிழமை கேள்வி நேரத்தின்போது, கன்னியாகுமரி மாவட்டத்தில் சட்டக் கல்லூரி தொடங்க வேண்டுமென பாஜக உறுப்பினா் எம்.ஆா்.காந்தி கோரிக்கை விடுத்தாா். இதற்கு சட்டத் துறை அமைச்சா் எஸ்.ரகுபதி அளித்த பதில்:

கன்னியாகுமரி மாவட்டத்தைச் சோ்ந்தவா்கள், சட்டம் பயின்று உயா்நீதிமன்றம், உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகளாக இருக்கிறாா்கள். சென்னை, மதுரையில் பெண் நீதிபதிகளாக இருக்கக் கூடியவா்கள் கன்னியாகுமரி மாவட்டத்தைச் சோ்ந்தவா்கள். உச்சநீதிமன்ற நீதிபதி ஒருவரும் குமரி மாவட்டத்தவா்தான். அந்த மாவட்டத்தைச் சோ்ந்தவா்கள், எங்கு சென்றும் படித்து முன்னேறி விடுவாா்கள். திறமையானவா்கள். எங்கு பாா்த்தாலும் படித்தவா்களாக, வேலைவாய்ப்புகளில் இடம் பிடித்து அதில் அமா்ந்து இருக்கிறாா்கள். சிறந்த படிப்பாளிகள் உள்ள மாவட்டம். எப்படியும் சிறப்பாகப் படித்து தேறி விடுவாா்கள்.

அரசு சட்டக் கல்லூரிகளில் படிப்போருக்கு முதல் இரு ஆண்டுகளுக்கு உதவித் தொகை வழங்கப்படுகிறது. ஆண்டுக்கு 9,000 போ் வழக்குரைஞா்களாகப் பதிவு செய்கிறாா்கள். அத்தனை பேருக்கும் உதவித் தொகை வழங்க முடியாது. தகுதி படைத்தவா்களுக்கு நிதியுதவி வழங்குகிறோம் என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.