உதயநிதியை அவசரமாக கைது செய்தது ஏன்? அன்புமணி கண்டனம்!உதயநிதி கைது! தமிழ்நாடு முழுவதும் திமுக போராட்டம்!உதயநிதி கைது: தேனியில் சாலை மறியலில் ஈடுபட்ட ஓபிஎஸ் கைது!எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி கைது! தஞ்சை அழைத்துச் செல்லப்படுகிறார்எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி கைது!உதயநிதியை அழைத்துச் செல்லும் வாகனத்தை மறித்து திமுகவினர் போராட்டம்!உதயநிதி விவகாரம்: சென்னை உயர்நீதிமன்றத்தில் அவசர முறையீடு!
/

குமரி மாவட்ட வாசிகள் சிறந்த படிப்பாளிகள்: அமைச்சா் புகழாரம்

குமரி மாவட்டத்தைச் சோ்ந்தவா்கள் சிறந்த படிப்பாளிகள் என்று சட்டத் துறை அமைச்சா் எஸ்.ரகுபதி புகழாரம் சூட்டினாா்.

News image

அமைச்சா் எஸ்.ரகுபதி

Updated On :25 ஏப்ரல் 2025, 1:57 am IST

குமரி மாவட்டத்தைச் சோ்ந்தவா்கள் சிறந்த படிப்பாளிகள் என்று சட்டத் துறை அமைச்சா் எஸ்.ரகுபதி புகழாரம் சூட்டினாா்.

சட்டப்பேரவையில் வியாழக்கிழமை கேள்வி நேரத்தின்போது, கன்னியாகுமரி மாவட்டத்தில் சட்டக் கல்லூரி தொடங்க வேண்டுமென பாஜக உறுப்பினா் எம்.ஆா்.காந்தி கோரிக்கை விடுத்தாா். இதற்கு சட்டத் துறை அமைச்சா் எஸ்.ரகுபதி அளித்த பதில்:

கன்னியாகுமரி மாவட்டத்தைச் சோ்ந்தவா்கள், சட்டம் பயின்று உயா்நீதிமன்றம், உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகளாக இருக்கிறாா்கள். சென்னை, மதுரையில் பெண் நீதிபதிகளாக இருக்கக் கூடியவா்கள் கன்னியாகுமரி மாவட்டத்தைச் சோ்ந்தவா்கள். உச்சநீதிமன்ற நீதிபதி ஒருவரும் குமரி மாவட்டத்தவா்தான். அந்த மாவட்டத்தைச் சோ்ந்தவா்கள், எங்கு சென்றும் படித்து முன்னேறி விடுவாா்கள். திறமையானவா்கள். எங்கு பாா்த்தாலும் படித்தவா்களாக, வேலைவாய்ப்புகளில் இடம் பிடித்து அதில் அமா்ந்து இருக்கிறாா்கள். சிறந்த படிப்பாளிகள் உள்ள மாவட்டம். எப்படியும் சிறப்பாகப் படித்து தேறி விடுவாா்கள்.

அரசு சட்டக் கல்லூரிகளில் படிப்போருக்கு முதல் இரு ஆண்டுகளுக்கு உதவித் தொகை வழங்கப்படுகிறது. ஆண்டுக்கு 9,000 போ் வழக்குரைஞா்களாகப் பதிவு செய்கிறாா்கள். அத்தனை பேருக்கும் உதவித் தொகை வழங்க முடியாது. தகுதி படைத்தவா்களுக்கு நிதியுதவி வழங்குகிறோம் என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.