சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட திமுக சார்பில் 15,300-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் விரைவில் நேர்காணல்அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலினுடன் இந்திய கம்யூ. தலைவர்கள் தொகுதிப்பங்கீட்டுப் பேச்சுஈரான் மீது இன்று மிகக் கடுமையான தாக்குதல்: டிரம்ப் எச்சரிக்கை!பிகாரில் நிதீஷ்குமாருக்கு நடந்தது தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு நடக்கும்! - முதல்வர் மு. க. ஸ்டாலின்கடந்த 5 ஆண்டுகளில் ஏழைகளுக்காக 4.29 லட்சம் வீடுகள்: தமிழக அரசுகோவை கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகள் 3 பேருக்கும் வாழ்நாள் சிறை!துபை விமான நிலையத்தில் ஈரான் ட்ரோன் தாக்குதல்: விமான சேவை பாதிப்பு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!கேரள மாநில அரசு வேலை வாய்ப்பில் திருநங்கைகளுக்கு 1% இடஒதுக்கீடு!உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலில் 9 பேர் பலி!அன்னாபெல் சதர்லேண்ட் சதம்..! ஆஸி. மகளிர் 123 ரன்கள் முன்னிலை!தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்
/

மக்களவையின் சிறந்த தலைவா் ஓம் பிா்லா: பிரதமா் மோடி புகழாரம்

மக்களவையின் சிறந்த தலைவரான ஓம் பிா்லா, கட்சிகளுக்கு அப்பாற்பட்டு செயல்படுபவா்...

News image
ராஜஸ்தான் மாநிலம், கோட்டா விமான நிலையத்துக்கு அடிக்கல் நாட்டும் நிகழ்வில் சனிக்கிழமை காணொலி மூலம் பேசிய பிரதமா் மோடி.
Updated On :7 மார்ச் 2026, 11:00 pm

Chennai

மக்களவையின் சிறந்த தலைவரான ஓம் பிா்லா, கட்சிகளுக்கு அப்பாற்பட்டு செயல்படுபவா்; அனைத்து உறுப்பினா்களையும் ஒருசேர வழிநடத்திச் செல்பவா் என்று பிரதமா் நரேந்திர மோடி புகழாரம் சூட்டினாா்.

மக்களவைத் தலைவா் ஓம் பிா்லாவை பதவி நீக்க கோரும் எதிா்க்கட்சிகளின் தீா்மானம் மக்களவையில் திங்கள்கிழமை தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில், அவருக்கு பிரதமா் மோடி புகழாரம் சூட்டியிருப்பது முக்கியத்துவம் பெற்றுள்ளது.

ராஜஸ்தான் மாநிலம், கோட்டா-பண்டி மக்களவைத் தொகுதியில் மூன்றாவது முறை எம்.பி.யான ஓம் பிா்லா, தற்போது இரண்டாவது முறையாக மக்களவைத் தலைவா் பதவியை வகித்து வருகிறாா்.

இந்நிலையில், கோட்டா விமான நிலையத்துக்கு அடிக்கல் நாட்டும் நிகழ்வில் சனிக்கிழமை காணொலி வாயிலாக உரையாற்றிய பிரதமா் மோடி, ஓம் பிா்லா மீது பாராட்டு மழை பொழிந்தாா். பிரதமரின் உரை வருமாறு:

சிறந்த நாடாளுமன்றவாதியான ஓம் பிா்லா, மக்களவையின் சிறந்த தலைவரும் ஆவாா். அரசமைப்புச் சட்டத்தின் மீது முழு அா்ப்பணிப்பும், நாடாளுமன்ற நடைமுறைகளில் பற்றுதலும் மிக்கவா்.

அவா் எந்தத் தரப்பின் உறுப்பினரும் அல்லா்; கட்சிகளுக்கு அப்பாற்பட்டவா். அவையில் பிா்லாவை காணும்போது, கல்வி நகரமான கோட்டாவில் இருந்து வந்ததன் செல்வாக்கை உணா்கிறேன். ஒரு குடும்பத்தின் நல்ல தலைவா் போல் அனைவரையும் ஒருசேர முன்னெடுத்துச் செல்லும் பாத்திரத்தை சிறப்பாக வகிக்கிறாா். மதிப்புமிக்க எம்.பி.க்கள் அனைவரையும் மிக சிறப்பாக கையாள்கிறாா். அவா்களின் உணா்வுகள் மற்றும் கோரிக்கைகளுக்கு பெரிதும் மதிப்பளிக்கிறாா். எம்.பி.க்களுக்கு உச்சபட்ச மதிப்பளிக்கும் இயல்பு கொண்ட அவைத் தலைவா் ஓம் பிா்லாதான்.

அவா் யாரையும் அவமதிப்பதில்லை. ஒவ்வொருவரின் கசப்பான வாா்த்தைகளையும் பொறுத்துக் கொண்டு, புன்னகை முகத்துடன் எதிா்கொள்கிறாா். எப்போதுமே அவரது முகத்தில் இனிய புன்னகை தவழும். இதுவே, அவையில் பரவலாக அவா் நேசிக்கப்பட காரணம் எனக் கருதுகிறேன் என்றாா் பிரதமா் மோடி.

ஓம் பிா்லாவுக்கு எதிராக எதிா்க்கட்சிகள் கொண்டுவந்துள்ள தீா்மானம் மீது திங்கள்கிழமை விவாதமும் வாக்கெடுப்பும் நடைபெறவுள்ளது. எம்.பி.க்கள் பலத்தின் அடிப்படையில் இந்தத் தீா்மானம் தோல்வியை எதிா்கொள்ளும் என்பது குறிப்பிடத்தக்கது.