கமேனி உயிருடன் இருக்க வாய்ப்பில்லை! இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு!! மேற்கு வங்கத்தில் 7.04 கோடி வாக்காளா்கள்! மம்தா தொகுதியில் 47,094 போ் நீக்கம்! அஜீத் பவாரின் விமானம் விபத்தில் சிக்கியதற்கு மோசமான வானிலை காரணம்: ஏஏஐபி அறிக்கை வளைகுடா நாடுகளின் தமிழா்களுக்கு உதவ கட்டுப்பாட்டு அறை: முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு இஸ்ரேல் தாக்குதலில் ஈரான் பாதுகாப்பு அமைச்சர் கொலை? சென்னை - துபை, தோஹா, அபு தாபி, பஹ்ரைன் விமானங்கள் ரத்து!ஈரானில் பள்ளி மீது தாக்குதல்: பலியான மாணவிகளின் எண்ணிக்கை 85ஆனது!டி20 உலக கோப்பை அரையிறுதிக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்த பாகிஸ்தான்!திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கிற்கு 2 தொகுதிகள் மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகள்: திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு!மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் பதற்றம் மிகுந்த கவலை அளிப்பதாக வெளியுறவு அமைச்சகம் அறிக்கை!துபை சர்வதேச விமான நிலையங்கள் மறு அறிவிப்பு வரும் வரை மூடல்ஈரான் மீது தாக்குதல் - அமெரிக்கா, இஸ்ரேலுக்கு உக்ரைன் ஆதரவு!தமிழ்நாட்டில் 17 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்களைப் பாதுகாக்க உடனடி நடவடிக்கை: அரசுக்கு ராகுல் காந்தி வலியுறுத்தல்ஆந்திரம்: பட்டாசு ஆலை விபத்தில் பலி எண்ணிக்கை 18-ஆக உயர்வுமத்திய கிழக்கு நாடுகளுக்கு விமான சேவை நிறுத்தம்!
/

சிறுவாணி நீர்போல ஆட்சி... அண்ணாவை மேற்கோள்காட்டிப் பேசிய விஜய்!

சிறுவாணி நீர்போல தவெக ஆட்சி, சுத்தமானதாக இருக்கும் என்றார் விஜய்.

News image
மேடையில் விஜய்
Updated On :27 ஏப்ரல் 2025, 1:37 pm

DIN

சிறுவாணி நீர்போல தமிழக வெற்றிக் கழகத்தின் ஆட்சி சுத்தமானதாக இருக்கும் என அக்கட்சியின் தலைவர் விஜய் தெரிவித்தார்.

அண்ணா சொன்ன வார்த்தைகளை பூத் கமிட்டி உறுப்பினர்கள் மனதில் வைத்து மக்களைச் சந்திக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.

கோவையில் தமிழக வெற்றிக் கழகத்தின் வாக்குச்சாவடி முகவர்கள் கருத்தரங்கம் நடைபெற்று வருகிறது. நேற்று முதல் நாள் கருத்தரங்கம் நடைபெற்ற நிலையில், இன்று 2வது நாளாகவும் நடைபெற்றது.

இதில் தவெக தலைவர் விஜய், அறிஞர் அண்ணாவை மேற்கோள் காட்டிப் பேசினார்.

''தமிழக வெற்றிக் கழகத்தின் ஆட்சி சுத்தமான ஆட்சியாக இருக்கும். நம் ஆட்சியில் ஊழல்வாதிகள், மோசடியாளர்கள் இருக்கமாட்டார்கள், அதனால், பூத் கமிட்டி உறுப்பினர்கள் தைரியத்துடன் மக்களைச் சந்திக்க வேண்டும்.

அவர்களுக்காக நான், அண்ணா சொன்ன ஒன்றைக் குறிப்பிட்டுச் சொல்ல விரும்புகிறேன். மக்களிடம் செல், மக்களிடமிருந்து கற்றுக்கொள், மக்களுடன் வாழ், மக்களுடன் சேர்ந்து திட்டமிடு, மக்களை நேசி, மக்களுக்காக சேவை செய்.

இதைப் புரிந்துகொண்டு செயல்பட்டால், உங்கள் ஊர் சிறுவாணி நீர்போல அவ்வளவு சுத்தமான ஆட்சி அமையும். இன்னும் சொல்லப் போனால், உண்மையான, வெளிப்படையான ஆட்சியாகவும் இருக்கும். இதனை நம் சார்பாக நீங்கள் மக்களிடம் எடுத்துச் சொல்ல வேண்டும்.

வாக்குச்சாவடிக்கு வந்து ஓட்டுபோடும் மக்களுக்கு பாதுகாப்பு கொடுக்க வேண்டியது நமது கடமை.

குடும்பம் குடும்பமாக கோயிலுக்குச் செல்வதைப் போல, பண்டிகையைக் கொண்டாடுவது போல, நமக்காக மக்கள் வாக்களிக்க வேண்டும். அதனை நீங்கள் செய்து முடிக்க வேண்டும்.

இந்த வெற்றியை நாம் அடைவதற்கு உங்கள் செயல்பாடுகள் மிகமிக முக்கியம்; நீங்கள்தான் முதுகெலும்பு, இதனை மனதில் வைத்துச் செயல்படுங்கள்'' எனப் பேசினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.