தமிழக வெற்றிக் கழகத்தின் ஆட்சியில் குழந்தைகள் பாதுகாப்பில் நம்பர் 1 ஆட்சியாக இருக்கும் என்று விஜய் தெரிவித்துள்ளார்.
வேலூரில் நடைபெற்ற தவெக நிர்வாகிகள் சந்திப்பு மற்றும் தேர்தல் பிரசார நிகழ்ச்சியில் கலந்துகொண்டு அக்கட்சியின் தலைவர் விஜய் உரையாற்றினார்.
இந்த கூட்டத்தில் தவெக ஆட்சியில் என்னவெல்லாம் செய்யப் போகிறோம் என்று விஜய் தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டவை:
பெண் குழந்தைகள், ஆண் குழந்தைகள் பாதுகாப்பில் நமது ஆட்சி நம்பர் 1 ஆக இருக்கும்.
அரசுப் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் முதல் தரத்தில் இருக்கும்.
போட்டித் தேர்வுகளை சந்திக்கும் வகையில் அரசுப் பள்ளிகளின் பாடத்திட்டம் மாற்றி அமைக்கப்படும்.
உயர்நிலை பள்ளி பாடத்திட்டங்களில் அடிப்படை அரசியல் சாசன சட்டம் சேர்க்கப்படும்.
மாநில, மத்திய அரசு அலுவலகங்களை அணுகும் வகையில் தேர்வுகள் அற்ற செயல்முறை பாடத்திட்டங்கள் கற்பிக்கப்படும்.
நாடு முழுவதும் உள்ள மத்திய அரசின் கல்லூரி சேர்க்கை குறித்து மாணவர்களுக்கு புரிதல் உண்டாக்கப்படும்.
அரசுப் பள்ளிகளில் பெண் குழந்தைகளுக்கு சுத்தமான கதவு பொருத்தப்பட்ட கழிப்பறைகள் உறுதி செய்யப்படும்.
போதைப் பொருள்கள் இல்லாத தமிழகம் உருவாக்கப்படும்.
மாவட்ட ஆட்சியர்கள், காவல் கண்காணிப்பாளர்களில் சரிபாதி பெண்கள் இருக்கும் வகையில் மாற்றப்படும்.
மலை கிராமங்களில் பிரசவம் பார்க்கும் வகையில் அரசு சுகாதார மையங்கள் கொண்டுவரப்படும்.
பேருந்து போக்குவரத்து இல்லாத மலை கிராமங்கள் என்ற நிலை உருவாக்கப்படும்.
ஆட்டோ, லாரி ஓட்டுநர்கள் அவர்களின் குடும்பங்களுக்காக நல வாரியம் அமைக்கப்படும்.
தென் தமிழகம் உள்பட தமிழ்நாட்டில் தொழிற்சாலைகள் அமைக்க கவனம் செலுத்தப்படும்.
விவசாயிகள், மீனவர்கள் மற்றும் நெசவாளர்களின் தேவைகளை அறிந்து அவர்களுக்கான திட்டம் காலத்திற்கேற்ப உருவாக்கப்படும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.