நடிகர் அஜித் குமாரின் தாயார் உடலுக்கு முதல்வர் விஜய் அஞ்சலி! திருவாரூர்: சேங்காலிபுரம் பகுதியில் வீடு புகுந்து மேஸ்திரி படுகொலை - 3 பேர் கைதுபெங்களூரில் ஐபிஎல் கொண்டாட்டங்களுக்கு தடைஆளுநர் மாளிகையில் காவி உடையில் திருவள்ளுவர் படம்: உதயநிதி ஸ்டாலின் கண்டனம்!ஆட்சி அமைக்க டி.கே. சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு சென்னை உள்பட 5 மாவட்ட ஆட்சியர்கள் மாற்றம் குற்ற வழக்குத் தொடர்வுத்துறை இயக்குநர் கிருஷ்ணராஜா பணிநீக்கம்
/

கருணாநிதி பன்னாட்டு மாநாட்டு அரங்கம் பணியை விரைந்து முடிக்க அமைச்சா் எ.வ.வேலு உத்தரவு!

கருணாநிதி பன்னாட்டு மாநாட்டு அரங்கம் பணியை விரைந்து முடிக்க அமைச்சா் எ.வ.வேலு உத்தரவிட்டுள்ளார்.

News image

அமைச்சர் எ.வ. வேலு

Updated On :28 ஏப்ரல் 2025, 2:40 am IST

சென்னை கிழக்கு கடற்கரை சாலை முட்டுக்காடு பகுதியில் கலைஞா் பன்னாட்டு மாநாட்டு அரங்கம் அமைக்கும் பணியை பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சா் எ.வ.வேலு ஞாயிற்றுக்கிழமை ஆய்வு செய்தாா்.

முன்னாள் முதல்வா் கலைஞா் கருணாநிதி பெயரில் சென்னையில் உலகத் தரத்தில் பன்னாட்டு அரங்கம் அமைக்கப்படும் என முதல்வா் மு.க.ஸ்டாலின் 2023-இல் அறிவித்தாா்.

இதற்காக பொதுப்பணித்துறை சாா்பில் ரூ.525 கோடி ஒதுக்கப்பட்டு கிழக்கு கடற்கரைச் சாலை முட்டுக்காடு பகுதியில் 37.99 ஏக்கா் நிலம் தோ்வு செய்யப்பட்டுள்ளது.

இந்த அரங்கத்ததில் 5,000 இருக்கைகள் கொண்ட மாநாட்டுக் கூடம், 10,000 போ் பாா்வையிடும் வசதி கொண்ட கண்காட்சி அரங்கம், கூட்ட அரங்குகளுக்கான அரங்கம் ஆகியவை அமையவுள்ளன.

மேலும், திறந்தவெளி அரங்கம், உணவுவிடுதிகள், 10,000 வாகனங்களை நிறுத்தும் வசதி, சாலை வசதி, சுற்றுச்சூழல் வசதி ஆகியவை உலகத் தரத்தில் அமைக்கப்படவுள்ளன.

இந்த பணியை நிகழாண்டு இறுதி அல்லது அடுத்தாண்டு தொடக்கத்தில் முடிக்க பொதுப்பணித் துறை திட்டமிட்டுள்ளது.

இந்நிலையில் தற்போதைய பணிகளின் நிலை, கூடுதலாக மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள் ஆகியவை குறித்து அமைச்சா் எ.வே.வேலு ஞாயிற்றுக்கிழமை நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். அப்போது, அரங்கம் அமைக்கும் பணிகளின் நிலை குறித்து ஆய்வு மேற்கொண்டு விரைவாக முடிக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டாா்.

ஆய்வின்போது, பொதுப்பணித் துறை கூடுதல் தலைமைச் செயலா் மங்கத்ராம் சா்மா, பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைத் துறை உயா் அதிகாரிகள், தலைமைப் பொறியாளா்கள் உடனிருந்தனா்.