பள்ளி, கல்லூரிகளில் போதைப் பொருள் புழக்கம்: ஆய்வு நடத்த உத்தரவுஅமைச்சரவை விரிவாக்கம்! ஆளுநருடன் தனிச் செயலர் செந்தில் குமார் சந்திப்புதமிழ்நாட்டுக்கு 2 அரசு கூடுதல் தலைமை வழக்குரைஞர்கள்! குற்றவியல் வழக்குரைஞராக ஜான் சத்யன்!!சென்னையில் நிலவும் மிதமான வானிலை! எத்தனை நாள்கள் நீடிக்கும்?நாளை முதல் மே 31 வரை 5 ‘மெமு’ ரயில்கள் முழுமையாக ரத்து4 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் எச்சரிக்கைவான் ஆயுதங்களாக மாறிவிட்ட ட்ரோன்கள்: இந்திய விமானப் படை தலைமைத் தளபதி பெட்ரோல், டீசல் விலை உயா்வு: தமிழகத்தில் அத்தியாவசிய பொருள்கள் விலையும் உயர வாய்ப்புபொறியியலில் அரசு ஒதுக்கீடு சோ்க்கை: ஒரே நாளில் 16,229 மாணவா்கள் விண்ணப்பம் காலத்துக்கு ஏற்ப ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலை விரிவுபடுத்த வேண்டும்: பிரிக்ஸ் கூட்டத்தில் இந்தியா வலியுறுத்தல்
/

பள்ளி, கல்லூரிகளில் போதைப் பொருள் புழக்கம்: ஆய்வு நடத்த உத்தரவு

பள்ளி, கல்லூரிகளில் போதைப் பொருள் புழக்கத்தைத் தடுக்க ஆய்வு நடத்த உத்தரவு பிறப்பிப்பு

News image

போதைப் பொருள் புழக்கம் தடுக்க நடவடிக்கை - file photo

Updated On :47 நிமிடங்கள் முன்பு

சென்னை: தமிழ்நாட்டில் உள்ள பள்ளி, கல்லூரிகளில் போதைப் பொருள் புழக்கம் அதிகரித்து வருவதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்திருக்கும் நிலையில், ஆய்வுகளை நடத்த மதுவிலக்கு மற்றும் கலால் துறை ஆணையர் சுற்றறிக்கை வெளியிட்டுள்ளார்.

மதுவிலக்கு மற்றும் கலால்துறை ஆணையர், துறைசார்ந்த அதிகாரிகளுக்கு அனுப்பியிருக்கும் சுற்றறிக்கையில், பள்ளி, கல்லூரிகளில் போதைப் பொருள் புழக்கம் அதிகரித்திருப்பதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. எனவே கல்வி நிலையங்களில் போதைப் பொருள் புழக்கத்தைக் கட்டுப்படுத்தும் வகையில் அவ்வப்போது ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

பள்ளி, கல்லூரிகளுக்கு அருகே உள்ள கடைகளில், சந்தேக இடங்களை அடிக்கடி ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

டாஸ்மாக் சில்லறை விற்பனை கடைகள் மற்றும் வளாகங்களை ஆய்வு செய்ய வேண்டும். பள்ளி, கல்லூரிகளில் மாணவர்களுக்கு போதைப் பொருள் தடுப்பு விழிப்புணர்வுகளை நடத்த வேண்டும் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

போதைப் பொருள் கடத்தலில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுப்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

பள்ளி, கல்லூரிகளில் போதைப் பொருள் நடமாட்டத்தைத் தடுக்க தனி அலகுகள் உருவாக்கப்படும் என முதல்வர் விஜய் அறிவித்திருந்த நிலையில், கலால் துறை இந்த அறிவுறுத்தலை வெளியிட்டிருக்கிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.