அதிமுக பொதுச்செயலர் எடப்பாடி பழனிசாமி ஆக.11 முதல் தனது 3ஆம் கட்ட சுற்றுப்பயணத்தை மேற்கொள்கிறார்.
எடப்பாடி பழனிசாமியின் மக்களைக் காப்போம் தமிழகத்தை மீட்போம் சுற்றுப்பயணத்தின் 3ஆம் கட்டம் ஆகஸ்ட் 11ஆம் தேதி கிருஷ்ணகிரியில் தொடங்குகிறது என அதிமுக அறிவித்துள்ளது.
கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் சென்னை மாவட்டங்களில் அவர் 3ஆம் கட்ட சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.
பின்னர் ஆகஸ்ட் 23ஆம் தேதி திருப்போரூர் தொகுதியில் தனது 3வது கட்ட சுற்றுப்பயணத்தை எடப்பாடி பழனிசாமி நிறைவு செய்கிறார்.
எனவே, அதிமுக கட்சி நிா்வாகிகள், அனைத்து அணியின் நிா்வாகிகள், தொண்டா்கள் இதில் பங்கேற்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Summary
AIADMK General Secretary Edappadi Palaniswami will embark on his 3rd leg of his tour from August 11.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.










