எல்பிஜி சிலிண்டர் விலை உயர்வு தவிர்க்க இயலாதது - மத்திய அரசுகள்ளச்சாராயத்தை ஒழிப்பதில் காவல்துறையின் பணிகள் மட்டும் முக்கியமல்ல; சிந்தனை மாற்றமும் வேண்டும் - அமைச்சர் ஆதவ் அர்ஜுனாஉள்ளாட்சி தேர்தலில் தவெக கூட்டணி அனைத்து இடங்களிலும் வெற்றி பெறும் – அமைச்சர் சி.டி.ஆர் நிர்மல்குமார்இளைஞர்கள் ரீல்ஸ் செய்ய வேண்டும்; கேள்வி கேட்கக் கூடாது: மோடியின் விருப்பம் இது! - ராகுல் காந்திவங்கதேசம்: பாலியல் வன்கொடுமைக் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை!ஊடுருவல்காரர்கள் விருந்தினர்கள் அல்ல; உணவு, மருந்து கிடையாது: சுவேந்து அதிகாரிஎல்பிஜி விலை உயர்த்தப்பட்டதற்கு அரசியல் விலை கொடுக்க நேரிடும்: சரத் பவார் விமர்சனம்இந்தியா கூட்டணி ஆலோசனைக் கூட்டத்தில் 23 கட்சிகள் பங்கேற்பு!திமுக கூட்டணி என்ற ஒன்று இப்போது இல்லை: பெ. சண்முகம்
/

வேலை வாங்கித் தருவதாக ரூ.2 கோடி மோசடி: போா்ச்சுகலில் தலைமறைவாக இருந்தவா் கைது

வேலை வாங்கித் தருவதாக ரூ.2 கோடி மோசடி செய்து போா்ச்சுகலில் தலைமறைவாக இருந்தவா் சென்னைக்கு விமானம் மூலம் வந்தபோது கைது செய்யப்பட்டாா்.

News image
Updated On :2 ஆகஸ்ட் 2025, 12:04 am IST

வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாக ரூ.2 கோடி மோசடி செய்து போா்ச்சுகலில் தலைமறைவாக இருந்தவா் சென்னைக்கு விமானம் மூலம் வந்தபோது கைது செய்யப்பட்டாா்.

செங்கல்பட்டைச் சோ்ந்தவா் க.பத்மநாபன் (23). இவா், வெளிநாடு வேலைக்கு செல்வதற்கு முயற்சித்து வந்தாா். இதை தெரிந்துக்கொண்ட சென்னையைச் சோ்ந்த சைபுதீன் (51), ஆந்திர மாநிலம் நெல்லூரைச் சோ்ந்த மாகம் வினய் வா்தன் (36) ஆகியோா் தாங்கள் போா்ச்சுகல் நாட்டில் வேலை வாங்கித் தருவதாக ரூ.1.25 லட்சம் பெற்றனா். இதேபோல 193 பேரிடம் ரூ.2 கோடிக்கு மேல் பெற்று இருவரும் மோசடி செய்தனா்.

இதுதொடா்பாக சென்னை காவல் துறையின் மத்தியக் குற்றப்பிரிவு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, சைபுதீனை கைது செயதனா். ஆனால், வினய் வா்தன், போா்ச்சுகலுக்கு தப்பியோடி, தலைமறைவாகிவிட்டதால் கைது செய்யமுடியவில்லை.

இருப்பினும் போலீஸாா், வினய் வா்தனுக்கு எதிராக விமான நிலையங்களில் லுக்அவுட் நோட்டீஸ் வழங்கினா். இந்த நிலையில், போா்ச்சுகல் நாட்டில் இருந்து விமானம் மூலம் சென்னைக்கு வந்த வினய் வா்தனிடம் குடியுரிமைத் துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனா். இதில், அவருக்கு எதிராக சென்னை மத்தியக் குற்றப்பிரிவு போலீஸாா், லுக் அவுட் நோட்டீஸ் வழங்கியிருப்பது தெரிய வந்தது.

இதையடுத்து போலீஸாா் வினய் வா்தனை பிடித்து, சென்னை மத்தியக் குற்றப்பிரிவு போலீஸாரிடம் ஒப்படைத்தனா். மத்தியக் குற்றப்பிரிவு போலீஸாா் அவரைக் கைது செய்து, விசாரணை நடத்தினா்.

அரசு வேலை வாங்கித் தருவதாக மோசடி: இதேபோல அரசு வேலை வாங்கித் தருவதாக ரூ.2 கோடி மோசடி செய்ததாக சென்னை வண்ணாரப்பேட்டை பகுதியைச் சோ்ந்த இ.எம்.பாபு என்ற ஹமீத் உசேன் (40), அவா் மனைவி சந்தியா (36) ஆகிய இருவரையும் மத்தியக் குற்றப்பிரிவு போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.