கருணாநிதி நினைவு நாள்: முதல்வர் ஸ்டாலின் தலைமையில் அமைதிப் பேரணி!

முதல்வர் ஸ்டாலின் தலைமையில் அமைதிப் பேரணி...
முதல்வர் ஸ்டாலின் தலைமையில் அமைதிப் பேரணி
முதல்வர் ஸ்டாலின் தலைமையில் அமைதிப் பேரணி
Published on
Updated on
1 min read

மறைந்த திமுக தலைவா் கருணாநிதியின் நினைவு நாளை முன்னிட்டு, தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் அமைதிப் பேரணி நடைபெற்று வருகின்றது.

முன்னாள் முதல்வா் கருணாநிதியின் ஏழாவது ஆண்டு நினைவு நாள் இன்று கடைப்பிடிக்கப்படுகிறது.

இந்த நிலையில், சென்னை அண்ணா சாலையில் உள்ள ஓமந்தூராா் மருத்துவமனை வளாகத்தில் உள்ள கருணாநிதி சிலைக்கு இன்று காலை மாலை அணிவித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்.

இதனைத் தொடர்ந்து, ஓமந்தூராா் மருத்துவமனை வளாகத்தில் இருந்து மெரினா கடற்கரையில் உள்ள கருணாநிதி நினைவிடம் வரை முதல்வர் ஸ்டாலின் தலைமையில் பேரணி நடைபெற்று வருகின்றது.

இந்த பேரணியில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், திமுக நாடாளுமன்றக் குழுத் தலைவர் கனிமொழி, கட்சிப் பொருளாளர் டி.ஆர். பாலு, அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் மற்றும் கட்சி நிர்வாகிகளும் தொண்டர்களும் கலந்துகொண்டுள்ளனர்.

இறுதியாக, மெரினா கடற்கரையில் உள்ள கருணாநிதி நினைவிடத்தில் மலர்தூவி முதல்வர் ஸ்டாலின் அஞ்சலி செலுத்தவுள்ளார்.

Summary

On the occasion of the death anniversary of late DMK leader Karunanidhi, a peaceful rally is being held under the leadership of Tamil Nadu Chief Minister M.K. Stalin.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com