நீட்: மனநல ஆலோசனைக்கு உதவி எண்கள் அறிவிப்பு பசுமை ஆற்றல் வளர்ச்சியை வலுப்படுத்த 5 புதிய மண்டலங்கள்: அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் பாராட்டுக்குரியது: கமல்ஆசிரியர் தகுதித்தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 16 பேர் பலி! தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!
/

சென்னையை நோக்கி வரும் மேகக் கூட்டங்கள்! அடுத்த 2 மணி நேரத்துக்கு கவனம்

சென்னையை நோக்கி வரும் மேகக் கூட்டங்களால் அடுத்த 2 மணி நேரத்துக்கு கனமழை

News image

மேகக் கூட்டங்கள்

Updated On :1 டிசம்பர் 2025, 3:06 pm IST

தென்மேற்கு வங்கக் கடலில் உருவாகி, இலங்கையைப் புரட்டிப்போட்டுவிட்டு, சென்னை நோக்கி வந்து கொண்டிருக்கும் டிட்வா காரணமாக, அடர்த்தியான மேகக் கூட்டங்கள் சென்னையை நோக்கி நகர்ந்து வருகிறதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சென்னை மற்றும் திருவள்ளூரில் இன்று காலை முதலே பரவலாக கனமழை பெய்து வரும் நிலையில் அடுத்த இரண்டு மணி நேரத்துக்கு மிக கனமழைக்கான வாய்ப்பிருப்பதாக தமிழ்நாடு வெதர்மேன் என்று அறியப்படும் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் தன்னுடைய சமூக வலைத்தளப் பக்கத்தில் தெரிவித்திருப்பதாவது, டிட்வா மழை குறித்த அறிவிப்பில், வடக்கு திசையிலிருந்து சென்னை நகரத்திற்குள் மிகத் தீவிரமான மேகக் கூட்டங்கள் நகர்ந்து வருகின்றன.

அடுத்த இரண்டு மணி நேரங்களுக்கு சென்னை நகரம் முழுவதும் மழையின் தீவிரம் அதிகரிக்கும். இந்த மேகக் கூட்டங்கள் மெதுவாக நகர்ந்து வருவதால் கனமழை இடைவிடாது பெய்யும். புலிகாட் பகுதிக்கு அப்பால் மேலும் மேகக் கூட்டங்கள் எதுவும் காணப்படவில்லை.

நாம், மழைக்கான இடைவேளைக்குச் செல்வதற்கு முன் இதுதான் மிகப்பெரிய மழையாக இருக்கும், எனவே அடுத்த 2 மணிநேர மழையை அனுபவியுங்கள் என்று பதிவிட்டுள்ளார்.

ஆந்திர - தமிழக கடற்கரைக்கு 170 கி.மீ. தொலைவில் இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிலை கொண்டுள்ளது. இன்று காலை நிலவரப்படி மணிக்கு 10 கி. மீ. தொலைவில் நகர்ந்து வந்த தாழ்வு மண்டலம் தற்போது மணிக்கு 3 கி.மீ. வேகத்தில் நகர்ந்து வருகிறது.

சென்னைக்கு 30 கி.மீ. தொலைவில் வடக்கு நோக்கி நகர்ந்து வருகிறது. இது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேகங்கள் உருவாகி சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார மாவட்டங்கள் மீது மழையாகப் பொழிவதற்கு ஒரு சாதகமான சூழல் இருந்தால் போதும். அந்த அதிர்ஷ்டம் நேற்று இல்லாமல் போனது, ஆனால் இன்று எல்லாம் சரியாக பொருந்தி வந்துள்ளது.

இதனால்தான் வானிலை ஆய்வு மையம் நேற்று சிவப்பு எச்சரிக்கையையும் இன்று ஆரஞ்சு எச்சரிக்கையையும் வெளியிட்டிருந்தது.

வானிலையில் சுழற்சி இருக்கும் வரை மேகக் கூட்டங்கள் எந்த நேரத்திலும் உருவாகலாம். மேலும் நமக்கு அருகே மேகக் கூட்டங்கள் புதிதாக உருவாகும் என நம்புகிறோம்.

இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் அடுத்த 36 மணி நேரம் சென்னைக்கு அருகிலேயே நிலவும் என்றும் அவர் பதிவிட்டுள்ளார்.

Summary

Heavy rains for the next 2 hours due to cloud clusters moving towards Chennai

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.