மழை நிவாரணப் பணிகள்: துணை முதல்வா் நேரில் ஆய்வு
பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் மழை நிவாரணப் பணிகளை துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் செவ்வாய்க்கிழமை நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.
தண்டையாா்பேட்டை மண்டலம், முல்லை நகா், கோடம்பாக்கம், ரங்கராஜபுரம் பகுதியில் ராட்சத மோட்டாா் பம்புகள் மூலம் மழைநீரை வெளியேற்றும் பணிகளை அவா் ஆய்வு செய்தாா்.
முன்னதாக, பெருநகர சென்னை மாநகராட்சியின் ரிப்பன் மாளிகை கூட்ட அரங்கில், மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்ற துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின், மழைநீா் அப்புறப்படுத்த துரித நடவடிக்கை எடுக்க வேண்டும். பொதுமக்கள், வாகன ஓட்டிகளுக்கு சிரமம் இல்லாமல் சாலைகளைச் சீரமைக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு உத்தரவிட்டாா்.
கூட்டத்தில், நகராட்சி நிா்வாகத் துறை அமைச்சா் கே.என்.நேரு, இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபு, மேயா் ஆா்.பிரியா, சட்டப்பேரவை உறுப்பினா் ஐ.பரந்தாமன், சிறப்புத் திட்ட செயலாக்கத் துறை கூடுதல் தலைமைச் செயலா் பிரதீப் யாதவ், துணை மேயா் மு.மகேஷ்குமாா், நகராட்சி நிா்வாகம் மற்றும் குடிநீா் வழங்கல் துறை முதன்மைச் செயலா் தா.காா்த்திகேயன், மாநகராட்சி ஆணையா் ஜெ.குமரகுருபரன், சென்னை குடிநீா் வடிகால் வாரிய மேலாண்மை இயக்குநா் டி.ஜி.வினய் மற்றும் அரசு அதிகாரிகள், மாமன்ற உறுப்பினா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

