திருவள்ளூர் மாவட்ட பள்ளிகளுக்கு நாளை விடுமுறை!

திருவள்ளூர் மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு தொடர்பாக...
கோப்புப்படம்
கோப்புப்படம்
Updated on
1 min read

தொடர் மழை காரணமாக, திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் நாளை (டிச., 4) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

பள்ளிகளுக்கான விடுமுறை அறிவிப்பை திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் எம். பிரதாப் உத்தரவிட்டுள்ளார்.

சென்னை மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் நாளை (டிச., 4) விடுமுறை அறிவித்து ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே உத்தரவிட்டுள்ளார்.

தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை இன்று பெய்தது.

குறிப்பாக, சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களில் இன்று பலத்த மழை பெய்த நிலையில் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

Summary

Holiday for schools in Tiruvallur district tomorrow!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com