இங்கிலாந்துக்கு எதிராக ரன் குவிக்க நியூஸி. திணறல் - 160 ரன்கள் இலக்கு!தமிழக வரலாற்றில் ஒரு கூட்டணி நீண்ட காலமாக வெற்றிகரமாகத் தொடருவது இதுவே முதல்முறை - முதல்வர் ஸ்டாலின் சென்னை மெட்ரோ ரயில் பணி: கலங்கரை விளக்கம் முதல் திருமயிலை வரை சுரங்கம் தோண்டும் பணி நிறைவுஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ள 12 பேரின் ஜாமீன் ரத்து மலையாள நடிகர் திலீப் விடுதலையை எதிர்த்து கேரள அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு!அதிமுகவில் மீண்டும் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்! கச்சத்தீவு தேவாலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!கோவை நீலாம்பூரில் முதல்வர் மு. க . ஸ்டாலின் பிரசாரம்நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

மு.க. ஸ்டாலினுடன் காங்கிரஸ் ஐவர் குழு சந்திப்பு!

திமுக தலைவர் மு.க. ஸ்டாலினுடன் காங்கிரஸ் குழு சந்திப்பு...

News image
காங்கிரஸ் ஐவர் குழு- X/ INC
Updated On :3 டிசம்பர் 2025, 2:10 pm

இணையதளச் செய்திப் பிரிவு

திமுக தலைவர் மு.க. ஸ்டாலினை, தேர்தல் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைக்கான 5 பேர் கொண்ட காங்கிரஸ் குழு இன்று(டிச. 3) சந்தித்துள்ளது.

தமிழ்நாட்டில் இன்னும் ஒரு சில மாதங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் வரவுள்ளது. இதையொட்டி கட்சிகள், தேர்தல் பணிகள், பிரசாரம், தொகுதிப் பங்கீடு என தீவிரம் காட்டி வருகின்றன.

இந்நிலையில் திமுகவுடன் தொகுதிப் பங்கீட்டிற்கான பேச்சுவார்த்தைக்காக, தமிழகத்திற்கான காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் தலைமையில் தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, அகில இந்திய காங்கிரஸ் செயலாளர்கள் சூரஜ் எம்.என்.ஹெக்டே, நிவேதித் ஆல்வா, சட்டப்பேரவை காங்கிரஸ் தலைவர் ராஜேஷ் குமார் என 5 பேர் கொண்ட குழுவை காங்கிரஸ் தலைமை அமைத்துள்ளது.

இந்த குழு இன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலினைச் சந்தித்துப் பேசியுள்ளது.

சந்திப்பிற்குப் பின்னர் செய்தியாளர்களுடன் பேசிய செல்வப்பெருந்தகை, "தமிழ்நாட்டில் இந்தியா கூட்டணி வலுவாக இருக்கிறது. இந்த கூட்டணி வெற்றி கூட்டணி. காங்கிரஸ் தலைமை அமைத்த 5 பேர் கொண்ட எங்கள் குழு இன்று மரியாதை நிமித்தமாக முதல்வரைச் சந்தித்தோம். திமுகவில் தொகுதிப் பங்கீட்டிற்கான குழு அமைக்கப்பட்ட பிறகு எங்களுடைய பேச்சுவார்த்தை தொடங்கும்" என்று கூறினார்.

கடந்த தேர்தலில் வரும் தேர்தலில் கூடுதல் தொகுதிகளை காங்கிரஸ் கேட்கவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

summary

Tamilnadu Congress 5 member panel meets MK stalin in chennai

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.