பசுமை ஆற்றல் வளர்ச்சியை வலுப்படுத்த 5 புதிய மண்டலங்கள்: அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் பாராட்டுக்குரியது: கமல்ஆசிரியர் தகுதித்தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 16 பேர் பலி! தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!
/

எடப்பாடி பழனிசாமியுடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு!

எடப்பாடி பழனிசாமியுடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு பற்றி...

News image

எடப்பாடி பழனிசாமியுடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு - X

Updated On :11 டிசம்பர் 2025, 2:03 pm IST

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியை தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் இன்று(டிச. 11) சந்தித்துப் பேசியுள்ளார்.

சென்னை பசுமைவழிச் சாலையில் உள்ள எடப்பாடி பழனிசாமியின் இல்லத்தில் இந்த சந்திப்பானது நடைபெற்றுள்ளது.

தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் வருகிற டிச. 14 ஆம் தேதி தில்லி பயணம் மேற்கொள்ளவிருக்கிறார். தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் பணிகள் குறித்து மத்திய அமைச்சர் அமித் ஷாவைச் சந்தித்துப் பேசவிருக்கிறார்.

இந்நிலையில் சென்னையில் இன்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியைச் சந்தித்து நயினார் நாகேந்திரன் பேசியிருக்கிறார். சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக இருவரும் பேசியதாகக் கூறப்படுகிறது.

அதிமுகவின் பொதுக்குழுக் கூட்டம் நேற்று நடைபெற்ற நிலையில் அதிமுகவில் கூட்டணி சேர்ப்பு உள்ளிட்ட அனைத்துக்கும் இபிஎஸ்ஸுக்குதான் அதிகாரம் என்று சில முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

இதனிடையே, அதிமுக சார்பில் வரும் தேர்தலில் போட்டியிட வருகிற டிச. 15 முதல் விருப்ப மனுவைப் பூர்த்தி செய்து வழங்கலாம் என்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Summary

BJP Leader Nainar Nagendran meets ADMK General Secretary Edappadi Palaniswami

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.