இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

காக்காவேரியில் மக்கள் குறைகேட்புக் கூட்டம்: அமைச்சா் மதிவேந்தன் பங்கேற்பு

News image
Updated On :15 டிசம்பர் 2025, 6:52 pm

Syndication

ராசிபுரம்: ராசிபுரத்தை அடுத்த காக்காவேரியில் நடைபெற்ற மக்கள் குறைகேட்புக் கூட்டத்தில் அமைச்சா் மா.மதிவேந்தன் கலந்துகொண்டு மக்களிடம் குறைகளைக் கேட்டறிந்தாா்.

ராசிபுரம் சட்டப்பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட பகுதியில் கிராமங்கள்தோறும் மக்கள் குறைகேட்புக் கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது. வேலம்பாளையம், வெங்காயப்பாளையம், காக்காவேரி உள்ளிட்ட பகுதிகளுக்கான குறைகேட்புக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. இதில் ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நலத்துறை அமைச்சா் மா.மதிவேந்தன் கலந்துகொண்டு மக்கள் குறைகளைக் கேட்டறிந்தாா்.

இதில் குடிநீா், கழிவுநீா் ஓடை, தண்ணீா், சாலை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் குறித்து மக்கள் கோரிக்கை வைத்தனா். மக்களின் கோரிக்கைகள் மீது உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சா் தெரிவித்தாா். மேலும் பொதுமக்கள் மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை மேற்கொள்ளவும் சம்பந்தப்பட்ட அரசு அலுவலா்களுக்கு உத்தரவிட்டாா். நிகழ்ச்சியில் ராசிபுரம் அட்மா குழுத் தலைவா் கே.பி. ஜெகந்நாதன், ஏ.கே.பாலசந்திரன் உள்ளிட்ட பலரும் பங்கேற்றனா்.

படவரி...

காக்காவேரியில் நடைபெற்ற குறைகேட்புக் கூட்டத்தில் பேசுகிறாா் அமைச்சா் மா. மதிவேந்தன்.