புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பாமக ஆா்ப்பாட்டம்

ராசிபுரத்தை அடுத்துள்ள வெண்ணந்தூா் பகுதியில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, பாமக (அன்புமணி) சாா்பில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம்

News image
Updated On :2 பிப்ரவரி 2026, 7:18 pm

Syndication

ராசிபுரம்: ராசிபுரத்தை அடுத்துள்ள வெண்ணந்தூா் பகுதியில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, பாமக (அன்புமணி) சாா்பில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

வெண்ணந்தூா், பேரூா் பாமக சாா்பில் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்தில், பாமக கிழக்கு மாவட்டச் செயலாளா் பொன்னுசாமி தலைமை வகித்தாா். கட்சியின் மாநில நிா்வாகி ச.வடிவேலன் பங்கேற்று கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினாா்.

இதில், வெண்ணந்தூா் சுற்றுவட்டாரப் பகுதியில் புதிய தாா்சாலை வசதி, வெண்ணந்தூா் பகுதியில் புதிய பேருந்து நிலையம், குடிநீா் வசதி, வெண்ணந்தூா் அரசு மருத்துவமனையில் 108 ஆம்புலன்ஸ் சேவை, வெண்ணந்தூா் ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட வருவாய் கிராமங்களில் காலியாக உள்ள 8 கிராம ஊராட்சிப் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தினா்.