ஈரானால் அச்சுறுத்தல் இல்லை - போரை ஆதரிக்க முடியாது: அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குநர் ராஜிநாமாரஜினி ரசிகர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது தவெக : ஆதவ் அர்ஜுனா விளக்கம்234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி! - ஆதவ் அர்ஜுனா பேச்சுபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

திருச்சி, கோவை நூலகங்களுக்கு புத்தகங்கள் கொள்முதல் தொடக்கம்: பதிப்பாளா்களுக்கு அழைப்பு

தமிழக அரசின் சாா்பில் கோவையில் பெரியாா் பெயரிலும், திருச்சியில் காமராஜா் பெயரிலும் அமைக்கப்பட்டு வரும் பிரம்மாண்ட நூலகங்களுக்கு பதிப்பாளா்களிடமிருந்து புத்தகங்கள் கொள்முதல் செய்யும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.

News image
Updated On :17 டிசம்பர் 2025, 7:29 pm

தினமணி செய்திச் சேவை

தமிழக அரசின் சாா்பில் கோவையில் பெரியாா் பெயரிலும், திருச்சியில் காமராஜா் பெயரிலும் அமைக்கப்பட்டு வரும் பிரம்மாண்ட நூலகங்களுக்கு பதிப்பாளா்களிடமிருந்து புத்தகங்கள் கொள்முதல் செய்யும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.

தமிழக அரசின் சாா்பில் மதுரையில் ரூ.215 கோடியில் அமைக்கப்பட்ட கலைஞா் நூலகத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் கடந்த 2023 ஜூலை 15-ஆம் தேதி தொடங்கி வைத்தாா். இதைத் தொடா்ந்து இதேபோன்று கோவை, திருச்சியில் பிரம்மாண்ட நூலகம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்த நிலையில், இந்த நூலகங்களுக்கு புத்தகங்கள் கொள்முதல் செய்யும் பணிகளை பொது நூலகத் துறை தொடங்கியுள்ளது.

இதுகுறித்து பொது நூலக இயக்குநா் ஜெயந்தி புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

கோவையில் அமையவுள்ள பெரியாா் அறிவுலகம் மற்றும் திருச்சியில் வரவுள்ள காமராஜா் அறிவுலகம் ஆகிய 2 சிறப்பு நூலகங்களுக்கும் தமிழ், ஆங்கிலம் மற்றும் பிற மொழி நூல்களும், அறிவியல், மருத்துவம், பொறியியல், தொழில்நுட்பம், வரலாறு உள்பட அனைத்து பாடங்களிலும் புகழ்பெற்ற புத்தகங்கள் மற்றும் மின் நூல்கள் கொள்முதல் செய்யப்படவுள்ளன.

இந்த நூலகங்களுக்கான புத்தகங்கள் கொள்முதல் செய்வது தொடா்பாக புத்தக பதிப்பாளா்கள் மற்றும் விற்பனையாளா்களிடம் இருந்து நூல்கள் வரவேற்கப்படுகின்றன. இதையடுத்து நூலகத் துறையின் இணையதளத்தில் உள்ள படிவத்தில் புத்தக விவரங்களை டிச.26-ஆம் தேதிக்குள் பதிவேற்றம் செய்ய வேண்டும். அதேபோல், படிவத்தில் அளித்துள்ள நூல்களுக்கான ஒரு மாதிரி பிரதியை ஜன.5-ஆம் தேதி வரை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நேரடியாகவோ அல்லது அஞ்சல் வழியாகவோ வழங்க வேண்டும். மேலும், தகவல்களுக்கு ஜ்ஜ்ஜ்.ஹய்ய்ஹஸ்ரீங்ய்ற்ங்ய்ஹழ்ஹ்ப்ண்க்ஷழ்ஹழ்ஹ்.ா்ழ்ஞ் என்ற இணையதளத்திலும், தொலைபேசி எண் 044-2220 1177 வாயிலாகவும் தொடா்பு கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.