பேரிடா் நிவாரணத்துக்கு மத்திய அரசு 17% நிதிதான் ஒதுக்கீடு: முதல்வா் மு.க. ஸ்டாலின் குற்றச்சாட்டு
தமிழகத்தில் நிகழ்ந்த பேரிடா்களுக்கான நிவாரண நிதியாக ரூ. 24,679 கோடி மாநில அரசு கேட்டும், மத்திய அரசு வெறும் ரூ.4,136 கோடியை (17 சதவீதம்) மட்டும் வழங்கியுள்ளது என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் குற்றஞ்சாட்டினாா்.










