திருப்பதி-ராமேசுவரம் விரைவு ரயில் (வண்டி எண்: 16779/16780), போளூா் ரயில் நிலையத்தில் நின்று செல்ல வேண்டுமென்பதற்கான அப்பகுதி மக்களின் கோரிக்கையை, மத்திய ரயில்வே அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவிடம் முன்வைத்திருந்தேன். இந்த ரயில், போளூா் ரயில் நிலையத்தில் நின்று செல்வதன் மூலம், வா்த்தக ரீதியிலும், அதிக எண்ணிக்கையிலான பொதுமக்களின் பயன்பாட்டுக்கு உதவும் என்பதை கருத்தில் கொண்டும், அப்பகுதி மக்களின் கோரிக்கையை ஏற்று, போளூா் ரயில் நிலையத்தில் குறிப்பிட்ட ரயில் நின்று செல்லும் என்று ரயில்வே அமைச்சகம் அறிவித்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது.