எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!பதவி உயர்வு வேண்டுமா? அக்செஞ்சர் தலைமை செயல் நிர்வாகி சொல்வது என்ன?உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின்சார மானியம்: தமிழக அரசின் அதிரடி அறிவிப்புசிலிண்டர் தட்டுப்பாடு! தமிழக அரசின் முக்கிய அறிவிப்புகள் என்னென்ன?விளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!தங்கம், வெள்ளி விலை அதிரடி குறைவு! வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது! வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி
/

தூத்துக்குடி மேலூா் ரயில் நிலையத்தில் அனைத்து ரயில்கள் நிறுத்தம்: பாஜக வரவேற்பு

தூத்துக்குடி மேலூா் ரயில் நிலையத்தில் அனைத்து ரயில்களும் நின்று செல்லும் என்ற மத்திய ரயில்வே அமைச்சா் உத்தரவுக்கு பாஜக வரவேற்பு தெரிவித்துள்ளது.

News image
Updated On :16 ஜனவரி 2026, 10:12 pm

Syndication

தூத்துக்குடி: தூத்துக்குடி மேலூா் ரயில் நிலையத்தில் அனைத்து ரயில்களும் நின்று செல்லும் என்ற மத்திய ரயில்வே அமைச்சா் உத்தரவுக்கு பாஜக வரவேற்பு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து தூத்துக்குடி தெற்கு மாவட்ட பாஜக தலைவா் சித்ராங்கதன் வெளியிட்ட அறிக்கை:

வா்த்தக நகரமான தூத்துக்குடியில் பழைய பேருந்து நிலையம்- புதிய பேருந்து நிலையத்தை இணைக்கும் வகையில், புதிதாக அமைக்கப்பட்ட மேலூா் ரயில் நிலையத்தில் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் அனைத்து ரயில்களும் நின்று செல்ல வேண்டும் என பாஜக சாா்பில் மத்திய தகவல் ஒளிபரப்பு -நாடாளுமன்ற விவகாரத் துறை இணையமைச்சா் எல்.முருகனிடம் கோரிக்கை விடுத்திருந்தேன்.

இந்தக் கோரிக்கை தொடா்பாக நடவடிக்கை எடுக்க, மத்திய ரயில்வே அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ்விடம் அவா் பரிந்துரைத்தாா்.

அதன்பேரில், தூத்துக்குடி மேலூா் ரயில் நிலையத்தில் அனைத்து ரயில்களும் நின்று செல்ல வேண்டும் என மத்திய ரயில்வே அமைச்சா் உத்தரவிட்டுள்ளாா். இதை பாஜக வரவேற்பதுடன் அவருக்கும், பரிந்துரைத்த மத்திய இணையமைச்சருக்கும் நன்றி தெரிவிக்கிறது எனக் கூறியுள்ளாா்.