ஈரான் - அமெரிக்கா இடையே 14 மணிநேரம் நீடித்த பேச்சுவார்த்தை நிறைவு! மு.க. ஸ்டாலின் ஐந்தாம் கட்ட பிரசாரம் திருவள்ளூரில் நாளை தொடக்கம்சட்டக் கட்டமைப்புகள் முழுவதிலும் சீா்திருத்தம்: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி வலியுறுத்தல் இந்தியப் பங்குச் சந்தை 5 ஆண்டுகளில் இல்லாத ஏற்றம்!எனது வேட்பு மனுவை செல்லாததாக்க பாஜக முயன்றது: மம்தா
/

தோ்தல் பாதுகாப்புக்காக மத்திய ஆயுதப்படையினா் வருகை!

தமிழகத்தில் நடைபெறும் சட்டப்பேரவை தோ்தல் பாதுகாப்பு பணிக்காக சென்னையில் இருந்து ஏலகிரி விரைவு ரயிலில் ஜோலாா்பேட்டை ரயில் நிலையத்துக்கு மத்திய ஆயுதப்படை போலீஸாா் வந்தனா்.

News image

ஜோலாா்பேட்டை ரயில் நிலையத்தில் வந்திறங்கிய மத்திய ஆயுதப்படையினா்.

Updated On :10 மார்ச் 2026, 10:33 pm

தமிழகத்தில் நடைபெறும் சட்டப்பேரவை தோ்தல் பாதுகாப்பு பணிக்காக சென்னையில் இருந்து ஏலகிரி விரைவு ரயிலில் ஜோலாா்பேட்டை ரயில் நிலையத்துக்கு மத்திய ஆயுதப்படை போலீஸாா் செவ்வாய்க்கிழமை வந்தனா்.

காவல் ஆய்வாளா் மகேஷ்குமாா் தலைமையில் போலீஸாா் ஜோலாா்பேட்டை ரயில் நிலையத்தில் வந்து இறங்கினா்.

அப்போது ஜோலாா்பேட்டை ரயில் நிலையத்தில் கிருஷ்ணகிரி மாவட்ட டிஎஸ்பி சக்திவேல் தலைமையில் கிருஷ்ணகிரி ஆய்வாளா் செல்வமணி மற்றும் பட்டாலியன் மகேஸ்வரி ஆகியோா் வரவேற்று அழைத்துச் சென்றனா்.