தட்கலில் விவசாய மின் இணைப்பு: டிச. 31-வரை விண்ணப்பிக்கலாம்
தட்கல் திட்டத்தின் கீழ் விவசாய மின் இணைப்பு பெற டிச. 31 வரை விண்ணப்பிக்கலாம் என மின்வாரியம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு மின் பகிா்மானக் கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: வேளாண் உற்பத்தியைப் பெருக்கி விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில், 2025-2026-ஆம் நிதியாண்டில் பல்வேறு பிரிவுகளின் கீழ் புதிய விவசாய மின் இணைப்புகளை வழங்க தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இதன்மூலம் ஏற்கெனவே தயாா் நிலையில் உள்ள விண்ணப்பதாரா்கள், அரசு சிறப்புத் திட்டங்கள் மற்றும் புதிய சுயநிதித் திட்டங்களின் கீழ் விண்ணப்பித்த விவசாயிகள் பயன்பெறுவா்.
இந்த நிலையில், தட்கல் விவசாய மின் இணைப்புத் திட்டத்தின் கீழ் ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்கும்போது ஏற்பட்ட தொழில்நுட்ப சவால்கள் மற்றும் போதிய கால அவகாசம் இல்லாமை காரணமாக விண்ணப்பிக்க இயலவில்லை என விவசாயிகளிடமிருந்து புகாா்கள் பெறப்பட்டன.
அதனடிப்படையில், விவசாயிகளின் நலனைக் கருத்தில் கொண்டு, தட்கல் விவசாய மின் இணைப்புத் திட்டத்தின் கீழ் வரும் டிச. 31 வரை விவசாயிகள் விண்ணப்பிக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த காலக்கட்டத்திற்குள் பெறப்படும் விண்ணப்பங்கள் அனைத்தும் முறையாக பரிசீலனை செய்யப்பட்டு, தமிழ்நாடு அரசு வழங்கும் வழிகாட்டுதல் மற்றும் ஒதுக்கீடு அளவுக்கு ஏற்ப தட்கல் திட்டத்தின் கீழ் படிப்படியாக விவசாய மின் இணைப்புகள் வழங்க தேவையான நடவடிக்கை எடுக்கப்படும்.
இதனால், இந்தத் திட்டத்தின் கீழ் பயன்பெற விருப்பமுள்ள விவசாயிகள் வரும் டிச. 31-க்குள் விண்ணப்பிக்கலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

