ஒப்பந்த அடிப்படையில் பணிபுரியும் செவிலியர்களின் கோரிக்கை படிப்படியாக நிறைவேற்றப்படும் என மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்தார்.
பணி நிரந்தரம் உள்ளிட்ட 10 முக்கிய அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகத்தில் ஒப்பந்த செவிலியர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் இன்று அரசு செவிலியர்கள் சங்கம் மற்றும் ஒப்பந்த செவிலியர்கள் சங்க நிர்வாகிகளுடன் அமைச்சர் மா. சுப்பிரமணியன் பேச்சுவார்த்தை மேற்கொண்டார்.
இதன்பின்னர் செய்தியாளர்களுடன் பேசிய அவர்,
ஒப்பந்த அடிப்படையில் பணிபுரியும் செவிலியர்களின் கோரிக்கை படிப்படியாக நிறைவேற்றப்படும் என்று கூறியிருக்கிறோம்.
இதுவரை 3,614 ஒப்பந்த செவிலியர்களுக்கு பணி நிரந்தரம் செய்யப்பட்டுள்ளது. மேலும் 7,400 ஒப்பந்த செவிலியர்கள் உள்ளனர். செவிலியர்களுடைய கோரிக்கையை ஏற்று முதற்கட்டமாக கரோனா காலத்தில் பணியாற்றிய செவிலியர்களுக்கு 723 பணியிடங்கள் உருவாக்கப்பட்டு பொங்கல் பண்டிகைக்கு முன்னர் பணி நியமன ஆணைகள் வழங்கப்படும். மற்றவை காலியிடங்கள் உருவாகும்பட்சத்தில் படிப்படியாக நிரப்பப்படும்.
காலிப் பணியிடங்கள் உருவானால் பணி மூப்பு அடிப்படையில் முன்னுரிமை வழங்கப்படும்.
தொகுப்பூதிய செவிலியர்களுக்கு ஊதியத்துடன் கூடிய மகப்பேறு விடுப்பு வழங்குவது குறித்து பரிசீலனை செய்யப்படும்.
புதிய செவிலியர் கல்லூரிகளை உருவாக்குவது, கரோனா காலத்தில் பணியாற்றிய செவிலியர்களை பணியில் அமர்த்துவது உள்ளிட்ட நடவடிக்கைகளுக்கு செவிலியர் சங்கங்கள் ஆதரவு தெரிவித்துள்ளன" என்றார்.
Summary
Based on seniority, appointment orders will be issued first to 723 nurses: Minister
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பணி நிரந்தரம் கோரி செவிலியா்கள் போராட்டம்

பணி மூப்பு அடிப்படையில் பணி மாறுதல்: காவலா்கள் எதிா்பாா்ப்பு

கருணை அடிப்படையில் பணி: விடுபட்டோா் முற்றுகை முயற்சி

கரூா் சம்பவத்தில் உயிரிழந்தவா்களின் வாரிசுதாரா்கள் 31 பேருக்கு கருணை அடிப்படையில் அரசுப் பணி: நியமன ஆணையை முதல்வா் ஜோசப் விஜய் வழங்கினாா்
விடியோக்கள்

Duster காரை ஓட்டிப் பார்த்து ஆய்வு செய்த முதல்வர்! | CM Vijay |




