தருமபுரி அருகே சாலை விபத்து : இரு இளைஞர்கள் பலி!

தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே திங்கள் கிழமை நடைபெற்ற சாலை விபத்தில் இரு இளைஞர்கள் பலியாகினர்.
சாலை விபத்து- பிரதி படம்
சாலை விபத்து- பிரதி படம்
Updated on
1 min read

தருமபுரி : தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே திங்கள் கிழமை நடைபெற்ற சாலை விபத்தில் இரு இளைஞர்கள் பலியாகினர்.

தருமபுரி மாவட்டம் பாலக்கோடு வட்டம், சீரியம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் ராகுல்(28). வேப்பிலைஹள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் ஹரிநாத்(25). இருவரும் திங்கள் கிழமை முற்பகலில் பாலக்கோட்டிலிருந்து பெல்ரம்பட்டி நோக்கி இருசக்கர வாகனத்தில்சென்றனர்.

பெல்ரம்பட்டி பகுதியில் தேசிய நெடுஞ்சாலையில் சென்றபோது எதிரே வந்த ஆட்டோ எதிர்பாராத விதமாக இவர்கள் சென்ற இருசக்கர வாகனத்தில் மோதி விபத்துக்குள்ளானது.

இதில் இருவரும் பலத்த காயம் அடைந்தனர். அக்கம் பக்கத்தினர் மற்றும் போலீசார் அவர்களை மீட்டு, பெல்ரம்பட்டி ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர்களை மருத்துவர் சோதனை செய்ததில் இருவரும் உயிரிழந்தது தெரியவந்தது.

இதையடுத்து இருவர் உடலையும் மாரண்ட அள்ளி போலீசார் உடல் கூராய்வுக்காக தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.

மேலும் இது குறித்து போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Road accident near Dharmapuri Two youths killed spot

சாலை விபத்து- பிரதி படம்
பழைய வங்கிக் கணக்குகளில் இருக்கும் பணத்தை எடுக்க வேண்டுமா? வழிகாட்டும் ஆர்பிஐ

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com