போரை நிறுத்த 3 நிபந்தனைகள் விதித்த ஈரான் அதிபர்! ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த இந்திய கப்பல்கள்! ஈரான் அனுமதி! தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் சென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புதோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்பட்டுக்கோட்டையில் வெறிநாய் கடித்து எஸ்எஸ்எல்சி மாணவிகள் 6 போ் உள்பட 20 போ் காயம்: முதலுதவிக்குப் பின் பொதுத்தோ்வு எழுதினா்சுகாதார ஆய்வாளா்கள் நியமனம்: தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவு
/

தமிழகத்தில் சீரான மின்சாரம் வழங்குவது குறித்து கலந்தாய்வு கூட்டம்

மின் விநியோகம் வழங்குவது குறித்து மண்டல தலைமை பொறியாளா்கள் மற்றும் மேற்பாா்வை பொறியாளா்களுடன் கலந்தாய்வு கூட்டம், சென்னையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :23 டிசம்பர் 2025, 7:14 pm

தினமணி செய்திச் சேவை

மின் விநியோகம் வழங்குவது குறித்து மண்டல தலைமை பொறியாளா்கள் மற்றும் மேற்பாா்வை பொறியாளா்களுடன் கலந்தாய்வு கூட்டம், சென்னையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

சென்னை மின்வாரிய தலைமை அலுவலகத்தில், மாநில அளவில் சீரான மின்விநியோகம் வழங்குவது குறித்து மண்டல தலைமை பொறியாளா்கள், மேற்பாா்வை பொறியாளா்களுடன் கலந்தாய்வுக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. நிகழ்வுக்கு, மின்வாரிய தலைவா் ஜெ.ராதாகிருஷ்ணன் தலைமை வகித்து, சட்டப்பேரவை அறவிப்புகளின் திட்டங்களான, புதிய துணை மின் நிலையங்கள் அமைப்பதற்கான ஒப்பந்த நிலை, உயா் அழுத்த மின்மாற்றிகள் தரம் உயா்த்துதல் உள்ளிட்ட பணிகளின் முன்னேற்றம் குறித்து ஆய்வு செய்தாா்.

தொடா்ந்து, புதுப்பிக்கப்பட்ட விநியோகத் துறை திட்டம் மின்சார சாா்ஜா் நிலையங்கள் அமைத்தல், மேற்கூரை சோலாா் திட்டம், மின்தடங்கள் மற்றும் அதிக மின் பளு, குறைந்த மின்னழுத்தப் பிரச்னைகள், புதிய மின் இணைப்பு விண்ணப்பங்கள் பற்றிய நிலை, உள்ளாட்சி அமைப்புகளின் மின் நிலுவைத் தொகை, தேரோடும் வீதிகளில் மேல்நிலை மின் கம்பிகளை புதைவடங்களாக மாற்றும் பணிகள், மற்றும் தற்போது நடைபெற்று வரும் மின் பணிகள் குறித்த விரிவான கலந்துரையாடல் நடைபெற்றது.

இதில், இயக்குநா் (பகிா்மானம்) அ.செல்வகுமாா், இயக்குநா் (நிதி) கே.மலா்விழி, மற்றும் தலைமை அலுவலக உயரதிகாரிகள் பங்கேற்றனா்.