காமன்வெல்த் போட்டி: இந்தியாவுக்கு முதல் தங்கப் பதக்கம் வென்று கொடுத்த மீராபாய் சானு!400க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏ.க்கள்! தொகுதி மறுவரையறைக்குப் பிறகு புதிய சட்டப்பேரவை! சுவேந்து அதிகாரி கல்வி, தேர்வு முறையில் சீர்திருத்தம்: உயர்நிலைக் குழு அமைத்தார் பிரதமர் மோடி!பெல்லட் குண்டுகள் பயன்படுத்த அதிகாரம் அளித்தது யார்? மோடி மன்னிப்பு கேட்க வேண்டும் - கே.சி. வேணுகோபால்தமிழ்நாடு வருகிறார் ராகுல் காந்தி! மு.க. ஸ்டாலினுக்கு மேக்கேதாட்டு என்னவென்றே தெரியாது: நிர்மல் குமார்ஸ்விகி, ஸொமேட்டோவுக்கு போட்டியா? உணவு டெலிவரியில் களமிறங்கும் ஃப்ளிப்கார்ட்!போராட்டத்தில் மாணவர்கள் மீது போலீஸார் தாக்குதல்: உச்சநீதிமன்றம் நாளை விசாரணை
/

புதிய உச்சத்தை எட்டிய தங்கம், வெள்ளி விலை! இன்றைய நிலவரம்...

இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம் பற்றி...

News image
Updated On :25 டிசம்பர் 2025, 9:30 am IST

தங்கத்தின் விலை இன்று(வியாழக்கிழமை) மேலும் சவரனுக்கு ரூ. 160 உயர்ந்து புதிய உச்சத்தை எட்டியுள்ளது.

தங்கத்தின் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து வருகிறது. கடந்த டிச. 15 ஆம் தேதி ஒரு சவரன் தங்கம் விலை ஒரு லட்சம் ரூபாயைத் தாண்டிய நிலையில் பின்னர் சற்று குறைந்தது.

அதன்பின் டிச. 22, திங்கள்கிழமை மீண்டும் தங்கம் விலை ஒரு லட்சத்தைக் கடந்தது. அதுமுதலே நாள்தோறும் தங்கம் விலை புதிய உச்சத்தில் இருந்து வருகிறது.

இந்நிலையில் இன்று(வியாழக்கிழமை) சவரனுக்கு மேலும் ரூ. 160 உயர்ந்து ரூ. 1,02,560 -க்கு விற்பனை செய்யப்படுகிறது.

கிராமுக்கு ரூ. 20 உயர்ந்து இன்று ஒரு கிராம் தங்கம் ரூ. 12,820 -க்கு விற்பனையாகிறது.

வெள்ளி விலை இன்று காலை கிராமுக்கு ரூ. 1 உயர்ந்து ஒரு கிராம் ரூ. 245 - க்கும், கிலோவுக்கு ரூ. 1,000 உயர்ந்து ஒரு கிலோ ரூ.2,45,000 -க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

தங்கம், வெள்ளி விலை புதிய உச்சத்தை எட்டியுள்ளது மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சர்வதேச நாடுகள் தங்கத்தின் மீதான முதலீட்டை அதிகரித்து வருவதனால் விலை உயர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.

Summary

Chennai gold and silver rate today

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.