ராமதாஸ் பொதுக்குழுவுக்கு அனுமதி தரக்கூடாது: அன்புமணி தரப்பு புகார்!

அன்புமணி தரப்பு காவல் துறையினரிடம் புகார் அளித்திருப்பது தொடர்பாக...
ராமதாஸ் - அன்புமணி
ராமதாஸ் - அன்புமணிகோப்புப்படம்
Updated on
1 min read

சேலத்தில் வரும் டிச. 29 ஆம் தேதி நடைபெறவுள்ள பாமக செயற்குழு மற்றும் பொதுக்குழுக் கூட்டத்துக்கு அனுமதி தரக்கூடாது என்று அன்புமணி தரப்பினர் சேலம் காவல் ஆணையாளர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளனர்.

பாட்டாளி மக்கள் கட்சியின் பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் வரும் டிச. 29 ஆம் தேதி ஐந்து ரோடு பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் தலைமையில் நடைபெற உள்ளது.

இது தொடர்பாக, அன்புமணி தரப்பினர் சேலம் காவல் ஆணையாளர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளனர்.

அன்புமணி தரப்பு காவல் துறையிடம் அளித்த மனுவில், “உயர் நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றத்தால் பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் மருத்துவர் அன்புமணிதான் என்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

பொதுக்குழுவை கூட்டவும், அதனை தலைமை ஏற்கவும் தலைவர் அன்புமணியைத்தவிர வேறு யாருக்கும் அதிகாரம் இல்லை. கட்சியின் சார்பாக எந்த அனுமதியும் பாதுகாப்பும் நாங்கள் கோரப்படவில்லை.

கட்சியின் பெயரை தவறாகப் பயன்படுத்தி அனுமதி கேட்டால் அது சட்டவிரோதமானது; அதற்கு அனுமதி தர வேண்டாம்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், பாட்டாளி மக்கள் கட்சியின் பெயரையோ, அதன் கொடியையோ, அடையாளங்களையோ தவறாகப் பயன்படுத்தும் நபர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கும்படி பாட்டாளி மக்கள் கட்சியின் அன்புமணி தரப்பினர் சேலம் காவல் ஆணையாளர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளனர்.

Summary

Anbumani's faction has filed a complaint at the Salem Police Commissioner's office, requesting that permission not be granted for the PMK executive and general council meetings scheduled to be held in Salem on December 29th.

ராமதாஸ் - அன்புமணி
பாமக கூட்டணியை சேலம் பொதுக்குழுவில் ராமதாஸ் அறிவிப்பாா்: ஜி.கே.மணி

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com