400க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏ.க்கள்! தொகுதி மறுவரையறைக்குப் பிறகு புதிய சட்டப்பேரவை! சுவேந்து அதிகாரி கல்வி, தேர்வு முறையில் சீர்திருத்தம்: உயர்நிலைக் குழு அமைத்தார் பிரதமர் மோடி!பெல்லட் குண்டுகள் பயன்படுத்த அதிகாரம் அளித்தது யார்? மோடி மன்னிப்பு கேட்க வேண்டும் - கே.சி. வேணுகோபால்தமிழ்நாடு வருகிறார் ராகுல் காந்தி! மு.க. ஸ்டாலினுக்கு மேக்கேதாட்டு என்னவென்றே தெரியாது: நிர்மல் குமார்ஸ்விகி, ஸொமேட்டோவுக்கு போட்டியா? உணவு டெலிவரியில் களமிறங்கும் ஃப்ளிப்கார்ட்!போராட்டத்தில் மாணவர்கள் மீது போலீஸார் தாக்குதல்: உச்சநீதிமன்றம் நாளை விசாரணை குஜராத்தில் மரம் நடுவதில் சாதனை... அன்னையின் பெயரில் ஒரு மரம் நடுங்கள் - பிரதமர் மோடி வேண்டுகோள் உலகளவில் கவனம்பெறும் உ.பி. பெண்களின் மூலிகை தேநீர்! மாணவர்கள் மீது தாக்குதல் நடத்த அனுமதி அளித்தது யார்? அமித் ஷாவுக்கு ராகுல் கேள்விமத்திய கல்வித்துறை அமைச்சராக பிரகலாத் ஜோஷி பொறுப்பேற்பு!
/

ராமதாஸ் பொதுக்குழுவுக்கு அனுமதி தரக்கூடாது: அன்புமணி தரப்பு புகார்!

அன்புமணி தரப்பு காவல் துறையினரிடம் புகார் அளித்திருப்பது தொடர்பாக...

News image

ராமதாஸ் - அன்புமணி - கோப்புப்படம்

Updated On :25 டிசம்பர் 2025, 2:08 pm IST

சேலத்தில் வரும் டிச. 29 ஆம் தேதி நடைபெறவுள்ள பாமக செயற்குழு மற்றும் பொதுக்குழுக் கூட்டத்துக்கு அனுமதி தரக்கூடாது என்று அன்புமணி தரப்பினர் சேலம் காவல் ஆணையாளர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளனர்.

பாட்டாளி மக்கள் கட்சியின் பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் வரும் டிச. 29 ஆம் தேதி ஐந்து ரோடு பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் தலைமையில் நடைபெற உள்ளது.

இது தொடர்பாக, அன்புமணி தரப்பினர் சேலம் காவல் ஆணையாளர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளனர்.

அன்புமணி தரப்பு காவல் துறையிடம் அளித்த மனுவில், “உயர் நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றத்தால் பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் மருத்துவர் அன்புமணிதான் என்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

பொதுக்குழுவை கூட்டவும், அதனை தலைமை ஏற்கவும் தலைவர் அன்புமணியைத்தவிர வேறு யாருக்கும் அதிகாரம் இல்லை. கட்சியின் சார்பாக எந்த அனுமதியும் பாதுகாப்பும் நாங்கள் கோரப்படவில்லை.

கட்சியின் பெயரை தவறாகப் பயன்படுத்தி அனுமதி கேட்டால் அது சட்டவிரோதமானது; அதற்கு அனுமதி தர வேண்டாம்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், பாட்டாளி மக்கள் கட்சியின் பெயரையோ, அதன் கொடியையோ, அடையாளங்களையோ தவறாகப் பயன்படுத்தும் நபர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கும்படி பாட்டாளி மக்கள் கட்சியின் அன்புமணி தரப்பினர் சேலம் காவல் ஆணையாளர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளனர்.

Summary

Anbumani's faction has filed a complaint at the Salem Police Commissioner's office, requesting that permission not be granted for the PMK executive and general council meetings scheduled to be held in Salem on December 29th.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.